வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Thursday, August 4, 2011

மனிதம் தொலைக்கும் மானுடம்...


இடுகைப் (Blogs) பெட்டிக்குள் புழுங்கும் புழுக்களாக...
வலைத் தளங்களில் (Web Sites) சிக்கித் தவிக்கும் சிலந்திகளாக...
முகப் புத்தகத்தில் (Facebook) புதையுண்ட பூச்சிகளாக...
செல்லிடப் பேசிகளில் (Cell /Smart Phones) மேயும் மந்தைகளாக...
மடிக் கணினிகளில் (Laptops) மயங்கும் விட்டில்களாக...
கைக் கணினிகளை (Tablets) ஏந்தித் திரியும் இயந்திரங்களாக...

இன்னும் எத்தனை நாட்கள் தான் மனிதம் தொலைத்துவிட்டு,
மானுடம் தேடுவோம் நாம்? பாரதிதாசன் கூற்று -
"பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்,
என் குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்...
அறிவை விரிவு செய், அகண்டமாக்கு..."

தொலைத்த இடம் இருட்டியதால் வேறிடம் போய்த் தேடுவதா?
மானுடத்தைத் தொலைத்து விட்டு, மனிதர்கள் நாம் வாழுவதா?
சிந்தியுங்கள் நண்பர்களே!!!

இக்கருத்தைப் பரப்பிடவும், முகப் புத்தகம், வலைத் தளம் மற்றும்
இடுகைகளின் உதவியை நாடும், என்றும் உங்கள் அன்புடன்...

- கலைபிரியன்...