வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Thursday, February 10, 2011

கேள்விப் பட்டது...

கவிஞர் வாலி ஒரு முறை கம்பன் விழாவில், "கம்பன் சைவமா, வைணவமா" என்ற தலைப்பில் கவியரங்கத்தில் கவி பாடினார். அவர் முடித்ததும் அவர் அருகில் வந்த பெரியவர் கேட்டாராம் "இவ்வளவு அருமையாகக் கவி பாடுகிறீர்களே... திரைப்படங்களில் மட்டும் ஏன் வர்த்தக நோக்கத்தில் பாடல் எழுதுகிறீர்கள்?" என்று. அதற்கு வாலி கூறினாராம் - "இங்கே, நான் தீஞ்சுவைத் தமிழுக்குப் பாலூட்டும் தாய்! அங்கோ, நான், விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய்!!" என்று... "வாலி என்ற புனைப் பெயர் ஏன் வைத்தாய்? உனக்குத் தான் வாலில்லையே?" என்று அவரது தமிழாசிரியர் ஒரு முறை வேடிக்கையாகக் கேட்டாராம், அதற்கு வாலி கூறிய பதில் - "வால் இல்லை என்பதனால் வாலி ஆக முடியாதா? ஏன், கால் இல்லை என்பதனால் கடிகாரம் ஓடாதா?"...

2 comments:

மதுரை சரவணன் said...

arumai.. pakirvukku nanri. vaalththukkal

Nathan Ram said...

Thanks, Saravanan...