வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Wednesday, December 8, 2010

தபால்காரராக வடிவேலு, வீட்டு சமையல்காரராக பார்த்திபன்... ஒரு கற்பனை...

வேகாத வெய்யிலில் (ஹய்யோ... ஹய்யோ, நாலு ரிஜிஸ்டர் தபால், நாலு மனி ஆர்டர், ரெண்டு தந்தி - இதக் கொண்டாந்து, இந்த சல்லிப் பயபுள்ளைகளுக்குத் தர்ரதுக்குள்ள, நம்ம ஆத்தாக் கிட்ட குடிச்ச பாலெல்லாம் வெளிய வந்துரும் பொருக்கே!!! நம்ம பேசாம, வாடிப் பட்டி ஆபீஸ்லயே குப்ப கொட்டிருக்கலாம்... எவவனையோ புடிச்சு, கைல கால்ல விழுந்து, செலவு செஞ்சு, நாலு காசு கூடக் கெடைக்குமேன்னு இங்க வந்தா, கடைசியில சொந்த செலவுலையே சூனியம் வச்சுக்குற கதையாவுல்ல இருக்கு!! ச்சை!!) தனக்குள்ளே பேசிக்கொண்டே தான் தந்தி கொடுக்க வேண்டிய அடுத்த வீட்டைத் தாண்டிப் போகிறார்...

"அட, இந்தாருக்கு  நம்பர் 12 !!!" சொல்லிக் கொண்டே பின்னால் வந்து, திறந்து கிடந்த கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போகிறார்...

அய்யா, அய்யா - வீட்ல யாரும் இல்லையா... உள்ள வரலாமா?

பனியன், வேட்டி, குத்தாலம் துண்டு, கையில் கரண்டி சகிதமாக வேர்வையைத் துடைத்த படியே ஹாலுக்கு வருகிறார் பார்த்திபன்... பதில் கூறாமல் வெறித்துப் பார்க்கிறார்...

ஒன்னத்தான்யா, உள்ள வரலாமான்னு கேட்டேன்!!!

டேய்...

என்னது, டேயா?

ஆமாண்டா, லூசு...

ஹ்ம்... இதுக்கு அதுவே தேவலாம் போலையே...

நீ கேக்குற கேள்விய, வாசல்ல நின்னு கேக்கனும்டா? இன்னும் விட்டா பெட் ரூமுக்கு வந்து கேப்பியா?

சரிப்பா, தப்பாக் கேட்டுப்புட்டேன்... கோச்சுக்காத... என்ன, சமையலா இருந்தியா?

இல்ல, கொளுத்து வேலை பாத்துட்டு வர்ரேன்...

அது சரி, நமக்கு வெனை வேறெங்கயும் இல்ல, நம்ம வாய்க்குள்ளையே தேன் இருக்கு...

வாய்க்குள்ள வெனை எல்லாம் வேற இருக்கா? நாக்கு தானே இருக்கும், எங்க காட்டு?

ஏம்பா? ஒரு கேள்விய தப்பாக் கேட்டுப்புட்டேன்? அது தப்பா? அதுக்கு போயி, இப்புடி எடக்கு மடக்கா பேசுறியே?

மடக்குன்னா (கையை மடக்கிக் காட்டுகிறார்) தெரியும்... எடக்குன்னா, அது என்ன?

வந்த வேலைய விட்டு இன்னி ஒன்கிட்ட ஒரு கேள்வி கேட்டா, என்னைய பிஞ்ச செருப்பக் கொண்டு அடிப்பா... (தனக்குள் - "அய்யய்யோ, அய்யய்யோ, உணர்ச்சிவசப்பட்டு சொல்லிப் புட்டமே, சொல்லிப் புட்டமே - பய புள்ள நெஜமாவே அடுச்சுப்புடுவேன் பொருக்கே?" என்று சொல்லிக் கொள்கிறார்)... (முறைத்துப் பார்த்தபடி...) தந்தி வந்துருக்கு... கையெழுத்துப் போட்டு வாங்கிக்க...

நீ தானே வந்த, தந்தி வந்தத நான் பாக்கலையே?

ஷ், அப்பப்பப்பபா... இப்பவே கண்ணைக் கட்டுதே!!! முடியலடா, (அழுகிறார்) என்னால முடியல... நான் தாண்டாப்பா கொண்டாந்துருக்கேன் தந்தி... போதுமா?

அப்புடி சொல்லு... (கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொள்கிறார்...)

சரிப்பா, வர்ட்டா... (என்று சொல்லி விட்டு, நடையைக் கட்டுகிறார்)...

ஹலோ?

ம், இப்ப என்ன? (என்கிறார் திரும்பி)

வரட்டான்னு தானே கேட்ட? கேட்டு நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்க?

(கோபமாக)... ஏம்பா? ஏன்? எல்லாரும் வழக்கமா பேசுற மாதிரிதானே நானும் பேசுனேன்? என்னக் கண்டா மட்டும் ஏன் இந்த கொல வெறி? ஒங்காத்தா வயித்துக்குள்ள இருக்கும் போதே, என்னையக் கண்டா, எப்புடி எல்லாம் லந்து பண்ணலாம்னு யோசுச்சுக்குட்டே இருந்தியா? என்னது, சின்னப் புள்ளத் தனமா இருக்கு... ராஸ்கல்...போதும்பா, போதும்... இத்தோட நம்ம சங்காத்தத்த முடுச்சுக்குருவோம்... (என்று கூறிக் கொண்டே நடையைக் கட்டுகிறார் அங்கிருந்து)...

- கலைபிரியன்

No comments: