வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Saturday, September 13, 2008

டெல்லி குண்டு வெடிப்பு

மத சார்பின்மக்குக் கிடைக்கும் பரிசு...
என்று தான் விழிக்குமோ நம் அரசு?!

Thursday, September 11, 2008

23 ஆம் தேதி பிரதமர் அமெரிக்கா பயணம்

பிரதமர் நினைத்துக் கொள்வார் - "அப்பாடா, ஐந்து நாட்களுக்கு விடுதலை!!!"

செப்டம்பர் 11

மறைந்த சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி உரித்தாகுக!!!அதே நேரத்தில் இராக்கில் தேவை இல்லாமல் பலி கொடுக்கப்படும் உயிர்களுக்கும் மறவாமல் அஞ்சலி செலுத்துவோமாக!!!

Tuesday, September 9, 2008

வவுனியாவில் புலிகள் வான்வழித் தாக்குதல்

இந்திய வழங்கிய ராடார்கள் சேதம்; இந்திய ராணுவ அதிகாரிகள் காயம்; இதற்கிடையில், அப்பாவித் தமிழக மீனவர்களின் இலங்கைக் கடற்படைத் தாக்குதல்களும் நின்ற பாடில்லை!!!:

இனவாத சிங்கள அரசுக்கு உதவும் என் தாய் நாட்டுத் தலைவனை, என்னென்று சொல்ல,
தமிழோ செம்மொழி, தமிழரோ கிள்ளுக் கீரை... நல்ல கொள்கை!!!

Monday, September 8, 2008

அண்ணாத்துரை நூற்றாண்டு விழா

மக்கள் மனதை வென்று,
தன்
கொள்கைகளால் நின்றவருக்கு -
அவற்றைக் கொன்றவர்கள் எடுக்கும் விழா!!!

குன்னக்குடி வைத்தியநாதன் திடீர் மரணம்

இசை உலகம் இன்று தனது நரம்புகளில் நான்கை சொர்கத்திடம் பறிகொடுத்தது!!!

Friday, September 5, 2008

சாவில்லா வரம் - தமிழக அரசு!!!

உடன் பிறப்பே!!! தற்கொலை செய்து கொள்ள
மின் கம்பியை தொடும் தன்மானத் தமிழனைக்
காக்கத் தான் இந்த அரசு மறுவாழ்வு மின் வெட்டுத்
திட்டத்தை சிறப்பாக செயல் படுத்துகிறது!!!

கடிதம் வெளியிட்டது அமெரிக்கா - என் எஸ் ஜி யில் தொடர்ந்து இழுபறி


அணு ஒப்பந்தம் - அரசனை நம்பி புருஷனை
கை விட்ட கதை!!!

Thursday, September 4, 2008

பீகார் வெள்ளம்!!!


நீர் இன்றி அமையாது உலகு - இன்றைய பீகார் விதி விலக்கு!!!

ஒரிசா கலவரம் - வினை தீர்ப்பாயா!!!


அய்யனே - என் அம்மா செய்த மோதகமும்
நான் உன்னை வணங்க ஒரு முக்கிய காரணம் -
யானை வடிவில் நீ இருக்க என்றும் உனக்குப்
பிடித்ததில்லை - மதம்!!! அப்படி இருக்க உன்னை
வணங்கும் சிலருக்கு ஏன் இன்னும் மத வெறி!!!