வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Wednesday, February 2, 2011

நம்ம ராஜாவுக்குத் (CMமுக்குத் தான்) திரும்பிய பக்கமெல்லாம் செக்...

1. மத்திய ஆட்சி முடிய இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருப்பதால், தொகுதிப் பங்கீட்டில் முறைத்துக் கொண்டு, அமைச்சரவையிலிருந்து வெளியே வந்து விட முடியாது, அப்படியே வந்து விட்டாலும், ராஜாவுக்கு ஆப்புத் தான் (நான் ஆ. ராசாவைச் சொன்னேன், நீங்க வேற... மூத்த தமிழறிஞரைப் பத்தி அப்படிச் சொல்ல முடியுமா... சொன்னால், நமக்குப் புரியாமல், அவருக்கு மட்டுமே புரிந்த தமிழில், முரசொலியில் நம்மளைப் பத்திக் கவிதை எழுதுவார்... நமக்கேன் வம்பு...).

2. காங்கிரசிடம் பிகு செய்வதற்காக, பாமக நம்மக்கிட்ட இருக்குன்னு சும்மானாச்சுக்கும் சொல்லிவச்சு, டாக்டர் அய்யா காண்டாயி மறுப்புத் தெரிவித்து விட்டார். வயசுக் கோளாறுல, அவரு மேல கோபப் பட்டு, "கூட்டணியில் அவர்கள் சேர வாய்ப்பில்லைன்னு" வேற சொல்லிட்டாரு. ராசாவைக் கைது செஞ்சு காங்கிரஸ் பேரம் பேச ஆரபிச்சதும், வடிவேலு ஸ்டைல்ல "அய்யய்யோ, வட போச்சே"ன்னா, யாரு என்ன பண்ண முடியும்...

3. காங்கிரஸ் கோச்சுக்குட்டு போயி கேப்டனோட மூணாவது அணி கச்சேரி வச்சா, அந்தம்மா, டாக்டரை வளைச்சுப் போட்டுக்குச்சுன்னா, அண்ணாவின் தம்பியும், சிறுத்தைகளும் சேர்ந்து 234 தொகுதிகளிலும் நிற்கறதுக்கு ஆள் தேடுறதுக்குள்ள, தாவு தீந்து போகும்...

4. இது பத்தாதுன்னு, "மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் தான் இடி, நமக்குத் திரும்பிய பக்கமெல்லாம் தாரை தப்பட்டை எல்லாம் கிழிந்து தொங்குகிற மாதிரி இடி மேல் இடி"ன்னு, குடும்பத்துல எல்லா சைடுலேருந்தும் ஏகத்துக்கு குத்து விழுகுது...

87 வயசுல இதெல்லாம் ஆவுற கதையா? இவரு வயசுக்கு இருந்திருந்தா, சாணக்கியரே ஒதுங்கி ஓய்வெடுத்துக்கிட்டு இருப்பார்... இவர்னால, அந்தக் கருமத்தையும் எடுக்க முடியாம, ப்ச், பாவமாத் தான்யா இருக்கு...

நம்ம ஆட்சியில, நெடுஞ்செழியனுக்கு (அண்ணாவுக்குப் பின்னாடி, அவரு ஒதுங்கி நமக்கு வழி விட்டாரேங்குற ஒரே மரியாதைக்காவது...) மெரினா பீச்ல இடம் ஒதுக்கி இருந்தா, அந்தம்மாவவது, நமக்கு இடம் ஒதுக்குவது பத்திப் பரிசீலிக்கலாம், இப்ப அதுக்கும், "அய்யய்யோ, வட போச்சே" கத தான்...

No comments: