வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Monday, December 13, 2010

காதலி! நீ பத்திரமா?!

பூ ஒன்று மோதியதில் உன் புன்னகை உதிர்ந்ததடி!!!
மாவிலை விழுந்து உந்தன் மேனி கொஞ்சம் அதிர்ந்ததடி!!!
இடி ஒன்று இடித்த போது - உன் இதயம் என்ன ஆயிற்று?

பதில் 1 - இதயம் த்திரம்தான், என்னிடத்தில் இருந்ததனால்...
பதில் 2 - எல்லாம் த்திரம்தான், இருந்தால் தானே எதுவும் ஆக...

- கலைபிரியன்

Friday, December 10, 2010

சூப்பர் ஸ்டாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

ஆம் - உண்மையில்
நீ எங்கள்
முடி சூடா
மன்னன் தான்!!!
திரையில் மட்டுமே
நீ அணிகிறாய்
முடி (விக்)!!!
ஆல்கஹாலே வேண்டாம்,
நீ திரும்பும்
இடம் எல்லாம்...
எகிறும் கிக்!!!
சிவாஜி ஆண்ட
தரையில் உதித்த
நீ, எங்கள்
சிவாஜி ஆண்ட
திரையில் துருவம்
கண்டாய்!!! தமிழை/
தமிழரை - உயிர்
மூச்சாய்க் கொண்டாய்!!!
அவதாரமாய் உன்னைக்
காணும் ரசிகனை -
அவன் தாரத்தை
முதலில் அணுகச்
சொன்னாய்!!! தாயை
முதலில் பேணச்
சொன்னாய்!!! பெற்ற
மழலை முகம்
காணச் சொன்னாய்!!!
"உன் வாழ்க்கை
தான் உனக்கு
முக்கியம்" என்றாய்!!!
அவன் மனதில்
தலைவனாய் நின்றாய்!!!
மொத்தத்தில் அவனைப்
போல் அனைவரின்
இதயம் வென்றாய்!!!
அரிதாரம் பூசி
உந்தன் அழகை
மறைத்த நீ,
கோடிகளைத் தொட்ட
பின்னும் - உன்
உள் அழகைப்
பேணுகிறாய்!!!
நாளைய முதல்வன்
என்று நவிலும்
பலர் முன்னால்
"நாயகன் நான்"
என்று தம்பட்டம்
அடிக்காமல், ஒரு
புதல்வனாய்த் (தலைமகனாய்த்)
தவழுகிறாய் திரைத்தாயின்
கலைமடியில்!!! சிலிக்கான்
திரையினில் என்றும்
ஒரு இந்திரன்
நீ - எங்கள்
மனதில் எல்லாம்
மிளிரும் எந்திரன்
நீ!!! அகவை
அறுபதைக் கொண்டாடும்
நாள் இன்று...
"உன் வழி
தனி" என்று...
எல்லோரும் உணர்வதே
நன்று!!! "அவன்"
காட்டும் வழியினிலே
அமைதியாய் நீ
பயணிக்க, உனக்கென்று
ஒரு வாழ்வை
இனியேனும் நீ
வாழ, வழி
விட நான்
இறைவனை வேண்டுகிறேன்!!!
என்றென்றும் நீ
வாழி!!!

- கலைபிரியன்

Wednesday, December 8, 2010

தபால்காரராக வடிவேலு, வீட்டு சமையல்காரராக பார்த்திபன்... ஒரு கற்பனை...

வேகாத வெய்யிலில் (ஹய்யோ... ஹய்யோ, நாலு ரிஜிஸ்டர் தபால், நாலு மனி ஆர்டர், ரெண்டு தந்தி - இதக் கொண்டாந்து, இந்த சல்லிப் பயபுள்ளைகளுக்குத் தர்ரதுக்குள்ள, நம்ம ஆத்தாக் கிட்ட குடிச்ச பாலெல்லாம் வெளிய வந்துரும் பொருக்கே!!! நம்ம பேசாம, வாடிப் பட்டி ஆபீஸ்லயே குப்ப கொட்டிருக்கலாம்... எவவனையோ புடிச்சு, கைல கால்ல விழுந்து, செலவு செஞ்சு, நாலு காசு கூடக் கெடைக்குமேன்னு இங்க வந்தா, கடைசியில சொந்த செலவுலையே சூனியம் வச்சுக்குற கதையாவுல்ல இருக்கு!! ச்சை!!) தனக்குள்ளே பேசிக்கொண்டே தான் தந்தி கொடுக்க வேண்டிய அடுத்த வீட்டைத் தாண்டிப் போகிறார்...

"அட, இந்தாருக்கு  நம்பர் 12 !!!" சொல்லிக் கொண்டே பின்னால் வந்து, திறந்து கிடந்த கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போகிறார்...

அய்யா, அய்யா - வீட்ல யாரும் இல்லையா... உள்ள வரலாமா?

பனியன், வேட்டி, குத்தாலம் துண்டு, கையில் கரண்டி சகிதமாக வேர்வையைத் துடைத்த படியே ஹாலுக்கு வருகிறார் பார்த்திபன்... பதில் கூறாமல் வெறித்துப் பார்க்கிறார்...

ஒன்னத்தான்யா, உள்ள வரலாமான்னு கேட்டேன்!!!

டேய்...

என்னது, டேயா?

ஆமாண்டா, லூசு...

ஹ்ம்... இதுக்கு அதுவே தேவலாம் போலையே...

நீ கேக்குற கேள்விய, வாசல்ல நின்னு கேக்கனும்டா? இன்னும் விட்டா பெட் ரூமுக்கு வந்து கேப்பியா?

சரிப்பா, தப்பாக் கேட்டுப்புட்டேன்... கோச்சுக்காத... என்ன, சமையலா இருந்தியா?

இல்ல, கொளுத்து வேலை பாத்துட்டு வர்ரேன்...

அது சரி, நமக்கு வெனை வேறெங்கயும் இல்ல, நம்ம வாய்க்குள்ளையே தேன் இருக்கு...

வாய்க்குள்ள வெனை எல்லாம் வேற இருக்கா? நாக்கு தானே இருக்கும், எங்க காட்டு?

ஏம்பா? ஒரு கேள்விய தப்பாக் கேட்டுப்புட்டேன்? அது தப்பா? அதுக்கு போயி, இப்புடி எடக்கு மடக்கா பேசுறியே?

மடக்குன்னா (கையை மடக்கிக் காட்டுகிறார்) தெரியும்... எடக்குன்னா, அது என்ன?

வந்த வேலைய விட்டு இன்னி ஒன்கிட்ட ஒரு கேள்வி கேட்டா, என்னைய பிஞ்ச செருப்பக் கொண்டு அடிப்பா... (தனக்குள் - "அய்யய்யோ, அய்யய்யோ, உணர்ச்சிவசப்பட்டு சொல்லிப் புட்டமே, சொல்லிப் புட்டமே - பய புள்ள நெஜமாவே அடுச்சுப்புடுவேன் பொருக்கே?" என்று சொல்லிக் கொள்கிறார்)... (முறைத்துப் பார்த்தபடி...) தந்தி வந்துருக்கு... கையெழுத்துப் போட்டு வாங்கிக்க...

நீ தானே வந்த, தந்தி வந்தத நான் பாக்கலையே?

ஷ், அப்பப்பப்பபா... இப்பவே கண்ணைக் கட்டுதே!!! முடியலடா, (அழுகிறார்) என்னால முடியல... நான் தாண்டாப்பா கொண்டாந்துருக்கேன் தந்தி... போதுமா?

அப்புடி சொல்லு... (கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொள்கிறார்...)

சரிப்பா, வர்ட்டா... (என்று சொல்லி விட்டு, நடையைக் கட்டுகிறார்)...

ஹலோ?

ம், இப்ப என்ன? (என்கிறார் திரும்பி)

வரட்டான்னு தானே கேட்ட? கேட்டு நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்க?

(கோபமாக)... ஏம்பா? ஏன்? எல்லாரும் வழக்கமா பேசுற மாதிரிதானே நானும் பேசுனேன்? என்னக் கண்டா மட்டும் ஏன் இந்த கொல வெறி? ஒங்காத்தா வயித்துக்குள்ள இருக்கும் போதே, என்னையக் கண்டா, எப்புடி எல்லாம் லந்து பண்ணலாம்னு யோசுச்சுக்குட்டே இருந்தியா? என்னது, சின்னப் புள்ளத் தனமா இருக்கு... ராஸ்கல்...போதும்பா, போதும்... இத்தோட நம்ம சங்காத்தத்த முடுச்சுக்குருவோம்... (என்று கூறிக் கொண்டே நடையைக் கட்டுகிறார் அங்கிருந்து)...

- கலைபிரியன்

Tuesday, December 7, 2010

பைத்தியம்!!!

தூங்காமல்
நான் கழித்த
ஒவ்வொரு
நிமிடமும்,
கனவாய் நீ
வருவாய்!!!
அன்பே -
கண்ணுறங்கி,
நான் அயர்ந்த
ஒவ்வொரு
மணித்துளியும்,
நினைவில் நீ
அலைவாய்!!!
உன்னை
அணைக்கையில்,
நான் உலகை
மறந்தேன்!!!
நீ, என்னை
மறுக்கையில்,
என் இதயம்
தொலைத்தேன்!!!
நான், சவரம்
செய்யாமல்
சுற்றித்
திரிகிறேன்...
நீயோ,
சமையல் கட்டினுள்
செட்டில்
ஆகிவிட்டாய்!!!
உன் பக்தனாய்
மட்டுமே என்னை
உணரும் நான் -
இன்று,
ஒரு பைத்தியம்!!!

- கலைபிரியன்

Monday, December 6, 2010

இன்றைய நடப்பு பத்தி, கவுண்டமணி/செந்தில் கற்பனை உரையாடல்... - II - தொடர்...

அண்ணே... அண்ணே...

ஷ்... அப்பப்பப்பப்பப்ப்பா... இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலைப்பா... சும்மா நொச்சு நொச்சுன்னு... சொல்ரா, கப்ளிங் தலையா...

பேப்பர் பாத்திங்களா...

இன்னும் இல்லடா, என்ன போட்ருக்கு, கொண்டா...

நம்ம பண்ணையாரு மவன் பழனில பிட் அடிச்சு பாஸ் பண்ணிட்டாராம்...

என்னது, அவரு வடக்கத்திலேயில்ல எங்கயோ படிக்குராப்ல... அப்புடியே இருந்தாலும், அவரு பிட் அடிச்சு பாஸ் பண்ணதெல்லாம் ஒரு நியூஸா வருதா?

இந்தோ, இங்க தான்... பாருங்க, படமெல்லாம் குட போட்ருக்கு...

இர்ரா, மூஞ்சில கடிச்சு வச்சுடாத... படிக்குறேன்... அடப் பாவி... இதுக்குதான், மழைக்காவது பள்ளிக் கூடத்துப் பக்கம் ஒதுங்கணுங்குறது...

அண்ணே, இப்படியெல்லாம் கேவலமா பேசாதிங்க, நாங்க எசுகேடட் பேமிலி...

என்னது, எச்சக்கல பேமிலியா?

என்ன தான் இருந்தாலும், நான் ரெண்டாப்பு பாசண்ணே... நீங்க பத்தாப்பு பெயிலு... நியாபகம் வச்சுக்குங்க...

டேய்... ஒன்கிட்ட எல்லாம், பேசி... ப்ச்....... ஐய்ய்ய்யோ... ராமா... ஏன் இந்த கழுசடப் பசங்கக்கிட்ட எல்லாம் என்னயப் பேச வைக்குர...

அது போகட்டும்ண்ணே, பாசு பாசு தான், பெயிலு பெயிலு தான்... பேப்பர்ல என்ன போட்ருக்கு, படிச்சீங்களா...

ஒன்னயெல்லாம் திருத்தவே முடியாது... டேய், அவரு "பிட்ஸ் பிலானி"ங்குற காலேஜுல படிச்சு நெறைய மார்க் வாங்கி பாஸ் பண்ணி இருக்காருண்ணு போட்ருக்குடா... நீ சொன்னா மாதிரிப் போயி ஊருக்குள்ள சொல்லிக்குட்டு திரியாத... ஒன்னோட ஆப் பாயில் வாய தச்சு வச்சுருவாணுவ...

இப்புடி வெவரமா சொல்லுங்க, அப்பத் தானே புரியும்...

ஒன்னயச் சொல்லி குத்தமில்லடா, தண்டோராத் தலையா... புள்ளைங்கள படிக்க வையுங்க படிக்க வையுங்கன்னு அந்த வாத்தி, வந்த நாளா, ஊருக்குள்ள கரடி மாதிரி கத்திக்குட்டு திரியுறான்... ஒரு பய கேக்குறது இல்ல... புள்ளைங்கள படிக்க வைக்காட்டி இலவச டிவி இல்லைன்னு சட்டம் கொண்டாறோனும்... அப்பத் தான் திருந்துவாங்க நம்மூரு ஜனங்க...

அண்ணே, படிச்சா ஏம்போட்டோ கூட பேப்பர்ல வருமாண்ணே...

டேய்... ஓடிப் போயிரு, இல்லாட்டி க்ரீச காச்சி வாயில ஊத்தீருவேன்...

- கலைபிரியன்

(Making it a series due to popular demand - look out for the next part soon and check out previous part @ http://kalaipiriyan.blogspot.com/2010/12/blog-post.html)

Friday, December 3, 2010

இன்றைய நடப்பு பத்தி, கவுண்டமணி/செந்தில் கற்பனை உரையாடல்...

அண்ணே, அண்ணே...

என்னடா, காலங்காத்தால, நொண்ணே, நொண்ணே... என்ன - பன்னி வறுத்துக் கொண்டாந்துருக்கியா?

இல்லண்ணே, காலைல பேப்பர் படிச்சதிலேருந்து மண்டையக் கொடையுதுண்ணே... ஒரே சந்தேகம்... அத்தான், பாத்து கிளியர் பண்ணிட்டுப் போகலாம்னு...

ரைட்டு... ரைட்டு... என்ன மாதிரி புத்திசாலின்னு இருந்தா இப்புடிப் பட்ட சந்தேகமெல்லாம் வர வேண்டியதான்... அது சரி, அதெல்லாம் மூளையுள்ளவனுக்கு தானே வரும்... நீ தான் ஹாலோ மண்டையனாச்சே... ஒனக்கெல்லாம் எப்பிடி...

பாத்திங்களா, தேடி வந்தா, கிண்டல் பண்றிங்களே...

சரி, நமக்குள்ள இதெல்லாம் சகஜம் தானே - சொல்றா ஐஸ் ப்ரூட் வாயா...

இத்தனை நாளா வெறும் கொல, கொள்ளனு மட்டும் தான் வந்துக்கிட்டிருந்துச்சு... இப்ப என்னமோ ஊழல் ஊழல்ன்னு வந்துக்குட்டிருக்கே... அப்புடின்னா என்னண்ணே?

அதுவாடா தீச்சட்டி தலையா? போன வருஷம் உன்கிட்ட 1000 ரூபா குடுத்து வோட்டுக் குத்தச் சொன்னான்ல ஒருத்தேன்?

ஆமாண்ணே, நான் கூட அவன் சொன்னா மாதிரி பூத்துக்கு போய் அவன் சொன்ன மிசின்ல குத்தி, அந்த மிசின் ஒடஞ்சு போச்சு... அங்க உக்காந்து மை தடவிக்கிட்டிருந்த நம்ம வாத்தியாரு என் மண்டைல அடிச்சு பத்திவுட்டாரு...

அடப் பாவி, உன்கிட்ட கொஞ்சம் சூதானமா இருக்கனும்டா...

சரி விஷயத்துக்கு வாங்கண்ணே... அவனுக்கு என்ன?

அவன மாதிரி 234 பயலுவ, ஜெயிச்சு, பாரிஸ் கார்னர்ல கொடி கட்டுன பில்டிங்குக்கு போய், கலாட்டா ரகளை எல்லாம் பண்ணுவானுவ...

அத்தான், அந்த கட்டடத்த LIC பில்டிங் பக்கத்துல மாத்திட்டேங்களே?!

அட கருவாப் பயலே, அது எப்படா ஒனக்கு தெரியும்?

நம்மூரு பூசாரி மெட்ராஸ் போயிட்டு வந்தாருல்ல, அவரு சொன்னாரு...

பரவாயில்லயேப்பா, அவன ஒரு இத்துப் போன பயன்னு நெனைச்சேன்... இவ்வளவு மேட்டர் வச்சுருக்கானா அவன்... சரி கெடக்குது கழுத, நம்ம விஷயத்துக்கு வருவோம்... இதே மாதிரி, 39 பேரு தமிழ் நாட்லேருந்து டில்லிக்கு போய் மத்த ஊர்லேருந்தெல்லாம் வர்ற இன்னொரு ஐநூத்திச் சொச்சம் பேரோட கலாட்டா ரகளை எல்லாம் பண்ணுவானுவ...

கலாட்டா ரகளையெல்லாம் பண்ணுனா போதுமா, வயித்துப் பாட்டுக்கு என்ன செய்வாங்கண்ணே?

அடங்கொண்ணியா, கரெக்டா கவ்விட்ட பாத்தியா... ஒன்ன மாதிரி ஈத்த பீத்த பயலுவளுக்கெல்லாம் குடுத்த ரூவாய எல்லாம் வசூல் பண்ணோனும்ல, அதுனால, ரோடு போடற காண்ட்ராக்டு, பஸ் ஸ்டாண்டு கட்டுரது, கரண்டு கம்பம் நடுறது, தூரு வார்றது, தண்ணி கனக்ஷன் குடுக்குறது, லைசன்ஸ் குடுக்கறதுல ஆரம்பிச்சு பத்திரம் பதியுறது வரைக்கும்... எல்லா விஷயத்துக்கும், கண்டிஷனா கமிஷன் வாங்குரானுவ, கம்மினாட்டி பயலுவ... இது தாண்டா ஊழல். புரியுதா?

புரியுதுண்ணே, ஆனா, பப்ளிக் கக்கூஸ் கட்டுரத விட்டீங்களே?

அட நாறப் பயலே... எவ்வளவு சொன்னாலும் அதத் தாண்டி ஒனக்கு ஒரு எழவும் வெளங்க மாட்டேங்குதே... ஆமா, நீ என்ன பண்ணுவ - அதுலயும் சேத்து தானே ஊழல் பண்றானுவ...

இப்ப நல்லாப் புரியுதுண்ணே... இதெல்லாம் ஒழியனும்னா என்னண்ணே பண்ணனும்?

மொதல்ல போய் பல்லைத் தேயுடா... நீயும் நானும் என்ன ஐநா சபையா, இதப் பேசிப் பைசல் பண்றதுக்கு?

- கலைபிரியன்

Tuesday, November 30, 2010

முல்லை வனத்தில் ஒரு முரட்டுப் பூ!!! முத்தமிழ் அறிஞராகவே இருந்தாலும், விதியை நொந்து கொண்டே ஆக வேண்டும், வாழ்நாளில்!!!

முல்லை வனத்தின் நடுவே, ஒரு
முரட்டுப் பூவைக் கண்டேன்...
அதன் மேல் பரிவு கொண்டே
நானும், நீரை ஊற்றி வளர்த்தேன்...
"சேற்றின் நடுவே மலர்ந்த,
செந்தாமரை நீ" என்று...
என் தோட்டம் கொணர்ந்து, அதனை
அரியணை ஏற்றிப் பார்த்தேன்!!!
ஓய்ந்து விழும் போதெல்லாம்,
என்னைத் தாங்கிப் பிடிக்கும் சக்தி...
அப் பூவிற்குன்டென்று எண்ணி, என்
அருகில் வைத்துக் கொண்டேன்!!!
பூவும் செடியொடு வளர்ந்தது, அதன்
வேரைப் பரப்பிக் கொண்டது...
முட்கள் கொஞ்சம் அதிகம், "சரி,
இயல்பே" என்று பொருத்தேன்!!!
பாலைக் கக்கும் போது, மூலிகை
என்று நினைத்தேன்... இன்றோ,
விஷமாய்த் திறிந்து அதுவும்,
வேரடி மண்ணைத் தின்றும் -
கிளைகள் பலவாய்க் கொண்டும்...
விருச்சமாய் வளருதே, அந்தோ!!! என்
தோட்டத்தையே விழுங்கும் அளவு...
அதை செழிக்க விட்டேனே, ஐயோ!!!
யானோ அரசன்? யானே கள்வன்!!!

- கலைபிரியன்

Sunday, November 28, 2010

இனாவானாக்கள்...

கரை படியாத கைக்குச் சொந்தக்காரர்கள் - காமன் வெல்த் ஊழல் புரிந்தவர்கள்...
ஆதர்ஷ புருஷர்கள் - ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் புரிந்தவர்கள்...
அக்கறை மிக்கவர்கள் - அலைக்கற்றை ஊழல் புரிந்தவர்கள்...
வீர தீரர்கள் - வீட்டுக் கடன் ஊழல் புரிந்தவர்கள்...
நினைவில் நிற்பவர்கள் - நில மோசடி புரிந்தவர்கள்...
இவர்களை நம்பியே - இன்றைய ஜனநாயகம்!!!
இனாவானாக்கள் - இந்தியக் குடிமக்கள்!!!

- கலைபிரியன்

Friday, November 26, 2010

தேவர் மகன் சிவாஜி வசனம்!!! விதை அவன் போட்டது... அவன் மகன் பழம் சாப்பிட்டான்... அடுத்து, அவன் மகன்... ஆனால் விதைச்சது - அவன்!!!

உலகம்
உருண்டையென்று
உரக்க
உரைத்திட்டான்...
உளறல் என்று
ஊர் பேசியது...
உண்மை
உணர்ந்த பொது...
உரைத்தவன்
உயிரோடில்லை!!!

- கலைபிரியன்

Wednesday, November 24, 2010

அரசியலை ஆக்கிரமித்திருக்கும் விந்தை மனிதர்கள் - இன்றைய ஜனநாயக அவலம்...

நாத்திகம் மற்றும் பகுத்தறிவு - இச்சொற்கள் இரண்டும் திரிக்கப்பட்டு தேவையில்லாத விதண்டாவாதம் செய்ய மட்டுமே இன்றைய நிலையில் பயன்படுத்தப் படுகின்றன. இறை நம்பிக்கை மற்றும் மூட பழக்க வழக்கங்களில் நம்பிக்கை இல்லாதவர்களை, நாத்திகர்கள் என்று அழைப்பது தவறு. அவர்கள் ஏதோ அழிவை நோக்கி பிரச்சாரம் செய்கின்ற சக்திகளாக சித்தரிக்கப் படுவதைக் கண்களை மூடிக் கொண்டு யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது அவர்களுடைய சிந்தனை மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு வைக்கப் படும் வேட்டாகும். அதே சமயம், பகுத்தறிவு வாதம் என்பதை, இன்னொரு சாரார், ஏதோ, எதையும் பகுத்து அறியக்க் கூடிய திறமையும் தன்மையும் அற்றவர்கள் என்று பொருள் படுகிற வகையில் பேசித் திரிவதும் ஆரோக்கியமாக அமையாது என்பதும் உண்மை. பெரியார் எவ்வளவோ சமூக முற்போக்கு சிந்தனை மிகுந்த திராவிடம் பிறக்க மூல காரணமாக இருந்தார் என்பதை எப்படி யாராலும் மறுக்க முடியாதோ, இராஜாஜி, தனது பார்வைக்கு வந்த அனைத்து விடயங்களையும் பகுத்து அறிந்து செயல்பட்ட உன்னதமான, நிர்வாகத் திறன் கொண்ட தலைவர், என்பதையும் யாராலும் எளிதில் புறந்தள்ளி விட முடியாது. அவர்கள் இருவரும் மாறுபட்ட கருத்துக்களுடன் எவ்வளவு ஆரோக்யமான நட்பையும், ஒருவர் பால் ஒருவர் அளவு கடந்த மரியாதையையும், அன்பையும் வைத்திருந்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம். அவர்கள் காலத்து அரசியல் ஆரோக்கியமாகவும் மதிக்கத் தக்கதாகவும் திகழ்ந்ததற்கு அவர்களைப் போன்ற அறிய தலைவர்கள் இருந்தது ஒரு காரணம். அவர்கள் வழி வந்ததாகக் கூறிக் கொள்ளும், இன்றைய இளைய தலைமுறையினரை வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் தலைவர்கள் யாவரும், இந்தச் சொற்களையும் கருத்துக்களையும், தங்கள் வசதிக்கேர்ப்பத் திரித்துக் கொண்டு ஊழல் மலிந்த வோட்டுப் பொறுக்கும் அரசியலுக்குப் பயன்படுத்துவது வேதனையிலும் வேதனை. மக்களைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதற்கு மட்டும், பழம் பெரும் தலைவர்களையும் அவர்களுடைய கருத்துக் களையும் மேற்கோள் காட்டும் இவர்கள், ஏனோ தங்கள் நடைமுறையில் மட்டும், அக்கருத்துக்களை ஒதுக்கி வைப்பது வேடிக்கையாகவும், விந்தையாகவும் இருக்கின்றது. மக்கள், தங்கள் கையில் இருக்கும் வாக்குரிமை என்னும் ஆயுதத்தை பயன் படுத்தி, இது போன்ற தீய சக்திகளுக்கு சாவு மணி அடிக்காத வரையில், இன்று நாம் கண்டு கொண்டிருக்கும் ஜனநாயக அவலங்கள் தொடர் கதையாகவே போய் விடும். சிந்திப்பார்களா மக்கள்?

- கலைபிரியன்

Monday, November 22, 2010

சாவில்லா வரம் - தமிழக அரசு!!!

உடன் பிறப்பே!!! தற்கொலை செய்து கொள்ள
மின் கம்பியை தொடும் தன்மானத் தமிழனைக்
காக்கத் தான் இந்த அரசு மறுவாழ்வு மின் வெட்டுத்
திட்டத்தை சிறப்பாக செயல் படுத்துகிறது!!!

சிந்திப்பீர் செயல் படுவீர்...

மை இட்டனர்
விரலில் -
ஒப்பமிட்டான்,
கருவி கண்டதும்
குழப்பம்...

கை நீட்டி
வாங்கிய
காந்தி -
பல்லிளித்தார்
பையிலிருந்து...

பொத்தானை
அழுத்திடத்தான்...
விரல் நீள
முனையும்
போது...

கரை
படிந்த
மனசாட்சி...
காரி
உமிழ்ந்தது...

இத்தனை
நாட்கள்
உன்னை ஏமாற்ற
யோசிக்காத
"இவர்"களை...

ஏமாற்ற
நீ - ஏன்
பட
வேண்டும் -
வெட்கம்...

கயவர்கள்
காந்தியை
நம்புவதே
துரோகம்
இழைக்கத்தான்...

அவர்கள்
கையில் இருந்து
அவன் பைக்கு
வந்த
காந்தி...

இனி ஒரு
முறை நாம்
ஏமாற்றப்
பயன்பட
மாட்டோம்...

என்றுதிர்த்த
புன்னகை
தான்...
அவனைக்
குழப்பியது...

அவர் வடிக்கும்
ஆனந்தக்
கண்ணீர்
வியர்வையாய் வடிகிறது -
கிழிந்த சட்டையில் ...

யோசித்தான் -
வட்டியும்
முதலுமாகத்
திருப்பிக் கொடுக்க
இதுவே சந்தர்ப்பம்...

உத்தமன் -
"49O" படிவத்தில்...
வாந்தி எடுக்கத்
தொடங்கினான் -
தன் மனசாட்சியை...

இன்னும் ஐந்து
வருடம்
கழித்துத்தான்
இனி மீண்டும் ஒரு
சந்தர்ப்பம்...

இனியாவது -
சிந்திப்பீர்
செயல்
படுவீர்...

மே பத்து - "உலக வரி ஏய்ப்பு தினம்"

அரவணைக்க அருகில் இல்லை நீ...
ஆனால், துணைக்கு தினமும் வருகிறாய்...

அட்சய த்ரிதிக்கு செய்கூலி சேதாரம் இல்லை... உன்
அன்புக்கோ விலை மதிப்பில்லை.

மே பத்தாம் தேதி "உலக வரி ஏய்ப்பு தினம்" - ஆம்...
நீ கொடுத்த அன்புக்கு வரி கட்டவில்லை எவனும் இன்னும்...

எங்கள் சுகத்துக்கு உன் துக்கம் மறந்தாய்...
எங்கள் நிம்மதிக்கு உன் தூக்கம் தொலைத்தாய்.

ஒவ்வொரு ஆத்திகனும் போற்றுகின்ற பெரியார் நீ...
ஒவ்வொரு நாத்திகனும் கற்கின்ற கடவுள் நீ...

உன் கோபம் - கொட்டுகின்ற தேள் அல்ல, மீட்டுகின்ற விரல்...
உன் குட்டு - "சுறுக்"கென்ற வலி இல்லை, செதுக்குகிற உளி...

மீட்டாமல் இசை வருவதில்லை வீணையிலிருந்து...
உன் கண்டிப்புத் தான் எங்களை ஓவியமாகத் தீட்டியிருக்கிறது...

செதுக்காமல் வடிந்து விடுவதில்லை சிற்பம்... உன்
அக்கறை இல்லாமல் நாங்கள் வெறும் படிக் கற்கள் - சொற்பம்...

இந்நாளில் உன்னை வாழ்த்துவதைக் கூடக் கடமையாய்
எண்ணியிருக்கிறோம் - எங்களில் பலர்...

இனி வருடமெல்லாம் "அன்னையர் தினம்" ஆக இருந்தாலும் -
வரி ஏய்ப்பிலிருந்து தப்ப முடியாது எங்களால்!!!

தேர்தல் - எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்...

"எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்"ன்ற கதையாக, "நாங்களும் வாக்களித்தோம்"னு சொல்லிக் கொள்கிற பொது ஜனத்தைத் தான் இன்றைக்குக் காண முடிகிறது...

நாம் வாக்களித்த வேட்பாளர் எவராவது ஒருவர், என்றாவது ஒரு நாள், தான் சொன்னதை எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம் என்று புள்ளி விவரத்துடன் வாக்காளர் மத்தியில் எடுத்துரைத்ததுண்டா? அல்லது வாக்காளர்கள் தான் அவர்களைக் கேள்வி கேட்கும் அளவுக்கு சிரமங்கள் எடுத்ததுண்டா?

போகிற போக்கில், காற்றில் கப்பல் விடுவேன் என்றும் கேப்பையில் இருந்து நெய் எடுப்பேன் என்றும் சொன்னால் கூட நமது வாக்காளர்கள் வாக்களித்து வெற்றிக் கனியை அவர்கள் தத்தம் தலைமையின் காலில் சமர்ப்பிதுவிதுவிட்டு வாக்களித்த நம்மையே சுரண்டக் கிளம்பிவிடுவார்கள்... இது தான் ஜனநாயக மரபு என்றே நம்மை இக்காலத் தலைவர்களும் நம்ப வைத்தும் விட்டார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை சிந்தித்துப் பார்க்க கூட திருவாளர் பொது ஜனங்களுக்கு நேரமும் இருப்பதில்லை...

செய்தித் தாள்களைப் புரட்டி, உலக நடப்பு தெரிந்து, இவ்வளவு காலம் நடந்ததை திரும்பிப் பார்க்க நேர்ந்தால், இவைகளெல்லாம் பொது ஜனங்களுக்குப் புலப் படும்:

1. குற்றப் பின்னணி உடையவர்கள் எந்தனை பேரைத் வெற்றி பெற வைத்துள்ளோம்?
2. ஊழல் பெருச்சாளிகள் எத்தனை பேரிடம் ஏமார்ந்துள்ளோம்?
3. சபையில் நமக்காக ஒரு கேள்வி கேட்கக் கூட நேரமில்லாமல் உழைத்தே ஓடாய்த் தேய்ந்து போன (யாருக்காக?) எத்தனை பேரை மறுபடி வாக்களித்து சபைக்கு அனுப்பி வைத்துள்ளோம்?
4. கொள்கையும் கட்சியும் மாறி மாறி நம்மிடம் மறுபடி மறுபடி வாக்குப் பெற வரும் எத்தனை பதவி வெறியர்களை நாம் தாங்கிப் பிடித்துள்ளோம்?
5. வெற்றி பெறுவதற்கு முன்னும் வெற்றி பெற்ற பின்னும் இவர்களில் எத்தனை பேர் வாக்காளர்களை ஒரே மாதிரி மரியாதையுடன் நடத்துகிறார்கள்?
6. கட்சித் தலைமைக்குக் காட்டுகின்ற விசுவாசத்தில் நூற்றில் ஒரு பங்கு மக்களுக்குக் காட்டுகிறார்களா இவர்கள்?
7. காமராஜர் வழி, கக்கன் வழி வந்ததாகக் கூறும் இவர்களில் எத்தனை பேர் சுயநலத்தை விடப் பொது நலத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள்?
8. பொது மருத்துவமனையில் இவர்களில் எவ்வளவு பேர் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சிகிச்சை பெறுகிறார்கள்? அரசு பேருந்துகளில் எத்தனை பேர் பயணிக்கிறார்கள்? அரசு பள்ளிகளில் எவ்வளவு பேரின் குழந்தைகள் பயிலுகிறார்கள்? இதற்கெல்லாம் பதில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருக்க, இவர்களில் எத்தனை பேருக்கு மக்களுக்கு சேவை ஆற்றுகின்ற மனப் பக்குவம் வரும்?
9. இவர்களில் எத்தனை பேர் மனசாட்சிக்கு மட்டும் கட்டுப்பட்டவர்கள்?
10. தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை இவர்களில் யாராவது பத்திரமாக எழுதித் தரத் தயாரா?

குறிப்பு - இந்தக் கேள்விகள் எந்த ஒரு கட்சியையோ கூட்டணியையோ சாராரையோ மனதில் வைத்துத் தொகுக்கப் பட்டவை அல்ல. இதற்காக என்னைச் சாடும் பொழுதாவது பேதம் பார்க்காமல் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருப்பார்களே எனில், அதை என் வாழ் நாள் சாதனையாகக் கருதுவேன்...

இவற்றை விட இன்னும் எவ்வளவோ கேள்விகள் மனதைத் துளைத்தெடுக்க, இதோ இந்தத் தேர்தலும் வந்து இவற்றுக்கு நல்ல பதில்கள் கிடைக்காமலேயே விடை பெறவும் போகிறது... எத்தனை பேர் இன்னும் "எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்"னு சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறார்கள் என்று தான் எனக்குத் தெரியவில்லை!!!

Sunday, November 21, 2010

தண்ணீரின் உணர்வுகள்!!!

நீ(ர்) - பஞ்ச பூதங்களில்
வணங்குதற்குரிய பாகம்!!!
மழை - தண்ணீரின் முகம்!!!
வெள்ளம் - தண்ணீரின் அதி வேகம்!!!
வறட்சி - தண்ணீரின் சோகம்!!!
சுனாமி - தண்ணீரின் கோபம்!!!
பசுமை - தண்ணீரின் இனிமை!!!
தூய்மை - தண்ணீரின் பெருமை!!!
குளம் - தண்ணீரின் பொறுமை!!!
ஆறு - தண்ணீரின் இளமை!!!
அருவி - தண்ணீரின் ஆசி!!!
கடல் - தண்ணீரின் முழுமை!!!
மொத்தத்தில் - நீ(ர்) பெருகி வந்தால்
நேரும் தாக்கம்!!! நீ
இல்லை என்றால் பெரும் ஏக்கம்!!!
மும்மாரி பொழிய வேண்டும் என்பதே,
எங்கள் நோக்கம்!!!

பாவாக்கம் - செ. இந்திரா (My sister)

Saturday, November 13, 2010

என்ன அழகு, எத்தனை அழகு!!!


ஆங் சன் சூ க்யி

மக்களுக்காய்ப் போராடி, மனிதம் வென்றெடுக்க -
மலையே எதிர் வரினும்
மல்லுக்கு நின்ற நீ - ஒரு
மாதர் குல மாணிக்கம்
மங்காத ஒளி விளக்கு...

சர்வாதிகாரிகளை, சம்ஹாரம் செய்திடவே...
சமதர்ம நெறி ஓதி...
சத்தியம் போதிப்பாய் -
சட்டத்தின் ஆட்சி தனை,
சமைத்திடவே வழி செய்வாய்...

காந்தியின் பெண்ணுருவே, கண்மணியே -
விடுதலை ஆகி வந்த, வின் வெளியின்
வெண்ணிலவே - வெளிச்சம் நீ
உதிர்த்திடுவாய்... உன்
மக்கள் வாழ்ந்திடவே...

பகோடாவின் பொக்கிஷமே, மியன்மாரின்
மின்சாரமே - பருவ மங்கையரைக்
காட்டிலும் நீ - பன்மடங்கு அழகன்றோ!!! உன்
உள்ளத்தின் உயரத்தை,
அளப்பதற்கும் வழியுண்டோ...

பர்மாவின் அமைத்க்காய் - உன்
வாழ்வின் பாதி தனைப் பலி
கொடுத்தாய் - பல்லாண்டு நீ
வாழ - இயற்கை இனி
வழி விடட்டும்...

- கலை பிரியன்

Monday, November 8, 2010

இன்று புதிதாய்ப் பிறந்தோம்!!!

வேக வேகமாக டையை சுற்றிக் கொண்டு, லேப்டாப்பைப் பற்றிக் கொண்டு, காரை நோக்கிச் சென்றான் நிகில். மனதுக்குள் "மணி ஆறரை ஆகுது, நிதானமாகப் போனாலே ஏழு மணி ட்ரெய்னைப் புடிச்சுடலாம்..." என்று சொல்லிக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தான். அன்றைய ஷேர் மார்க்கெட் செய்திகளில் மூழ்கிக்கொண்டே, மனதில் பலவாறான கணக்கு ஓடிக் கொண்டிருக்க, சீராகப் பயணித்துக் கொண்டிருந்தது கார்.

அவனையும் அறியாமல், வேகம் அதிகரித்து, ஸ்பீட் லிமிட் தாண்டி விட, பின்னால், சைரன் ஓசையுடன், போலீஸ் காரர் வண்டியை நிறுத்தினார். சட்டென்று இவ்வுலகத்துக்கு மீண்டு வந்து, தலையில் அடித்துக் கொண்டே வண்டியை நிறுத்தினான். லைசென்சை வாங்கிப் பார்த்து, பத்து நிமிட நேரம் யாருடனோ வாக்கி டாக்கியில் அளவளாவி விட்டு, டிக்கெட் கிழித்து நீட்டினார். எவ்வளவோ சமாதானம் சொல்லியும், ரோபோட் மாதிரி சொன்னதையே திருப்பி சொல்லிவிட்டு, மெதுவாகப் போகச் சொல்லி அறிவுறுத்திவிட்டுக் கிளம்பினார். நிகில் தன் விதியை நொந்த படியே, மெதுவாக வண்டியைச் செலுத்தினான்.

ஸ்டேஷனில் பார்க் செய்யும் போது மணி ஏழு பத்து. ஏழரை மணி வண்டிக்காகக் காத்திருந்தான். அறிவிப்புப் பலகையில் ஓடியதைப் பார்த்து முகம் சுளித்தான். யாரோ ரயில்வே ட்ராக் குறுக்கே விழுந்ததால் ஏழரை வண்டி விபத்து ஏற்பட்டு விட, 20 நிமிடம் தாமதம் என்று வந்தது. "தற்கொலை செய்து கொள்ள, இவனுக்கு, திங்கள் கிழமை காலை, அதுவும், நம்ம வண்டி தானா கிடைச்சுது. ச்சை. நம்ம நேரம் இன்னைக்கு சரியே இல்லை" என்று நொந்து கொண்டே போனில் ஈமெயில்களைப் புரட்டினான். சற்று நேரத்தில் "பேட்டரி டவுன்" என்று அதுவும் பல்லை இளித்தது. போனை அமர்த்தி விட்டு சற்றே கண் அயர்ந்தான்.

எட்டு மணி ஆனது, மெதுவாக எட்டிப் பார்த்தது அவன் காத்திருந்த ஏழரை மணி வண்டி. அதில் ஏறி ஜன்னல் ஓரமாக ஒரு சீட்டில் அமர்ந்து வேடிக்கை பார்க்க வசதியாக சாய்ந்து கொண்டான். ஐ பாட் இருக்கும் நினைவு அப்போது தான் வந்தது. ஆன் செய்து காதில் மாட்டிக் கொண்டான். "Autograph" பாடல் ஓலித்துக் கொண்டிருந்தது.

"எந்த மனிதன் நெஞ்சுக்குள், காயம் இல்லை சொல்லுங்கள்! காலப் போக்கில் காயம் எல்லாம், மறந்து போகும் மாயங்கள்..."

எவ்வளவு யதார்த்தமான வாக்கியம். நினைவலைகளில் மிதக்கத் தொடங்கினான் நிகில். இன்று காலை நடந்த விஷயங்களை விட, மிக மிக கொடூரமான பல திருப்பு முனைகள் அவன் வாழ்க்கையில் கடந்த ஒரு வருடமாக நடந்தேறியிருக்கின்றன. அவ்வளவும் அவன் கனவில் தோன்ற, கண்ணயர்ந்து உறங்கிப் போனான், அவற்றை அசை போட்டுக் கொண்டே. கழுத்திலே மாதாந்திர டிக்கெட்டைத் தொங்க விட்டுக் கொண்டே அவன் அசந்து தூங்கியதால், டிக்கெட் பரிசோதகரும் அவனை எழுப்பாமல் தன் வேலையைத் தொடர்ந்தார்.

ஒரு மணி நேர பயணத்துக்குப் பின், வாஷிங்டன் நகரத்தின் மையப் பகுதியில் தன்னுடைய கடைசி நிறுத்தத்தில் ஒரு பெரிய "க்ரீச்" சத்தத்துடன் நின்றது ட்ரெய்ன். தூக்கம் களைந்து எழுந்த நிகில், அங்குள்ள வாஷ் ரூம் சென்று, முகம் கழுவி விட்டு, நடக்கத் தொடங்கினான். ஏனோ பலவாறான எண்ணம் ஓடிக் கொண்டிருந்ததால், நடையில் ஒரு விதமான தளர்வு.

ஐ பாட் அடுத்த பாடலுக்குத் தாவியது, "எந்திரன்" படத்திலிருந்து...

"புதிய மனிதா... பூமிக்கு வா..."

கேட்டு கொண்டே பாடலில் ஆழ்ந்த நிகில், நடையில் துள்ளலும் சேர்ந்து கொண்டது... தனக்குள்ளே சத்தமாக ஓலித்துக் கொண்டான்... "ஆம், இன்று புதிய நாள்... இதுவும் கடந்து போகும்"!!

- கலை பிரியன்