வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Monday, December 13, 2010

காதலி! நீ பத்திரமா?!

பூ ஒன்று மோதியதில் உன் புன்னகை உதிர்ந்ததடி!!!
மாவிலை விழுந்து உந்தன் மேனி கொஞ்சம் அதிர்ந்ததடி!!!
இடி ஒன்று இடித்த போது - உன் இதயம் என்ன ஆயிற்று?

பதில் 1 - இதயம் த்திரம்தான், என்னிடத்தில் இருந்ததனால்...
பதில் 2 - எல்லாம் த்திரம்தான், இருந்தால் தானே எதுவும் ஆக...

- கலைபிரியன்

Friday, December 10, 2010

சூப்பர் ஸ்டாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

ஆம் - உண்மையில்
நீ எங்கள்
முடி சூடா
மன்னன் தான்!!!
திரையில் மட்டுமே
நீ அணிகிறாய்
முடி (விக்)!!!
ஆல்கஹாலே வேண்டாம்,
நீ திரும்பும்
இடம் எல்லாம்...
எகிறும் கிக்!!!
சிவாஜி ஆண்ட
தரையில் உதித்த
நீ, எங்கள்
சிவாஜி ஆண்ட
திரையில் துருவம்
கண்டாய்!!! தமிழை/
தமிழரை - உயிர்
மூச்சாய்க் கொண்டாய்!!!
அவதாரமாய் உன்னைக்
காணும் ரசிகனை -
அவன் தாரத்தை
முதலில் அணுகச்
சொன்னாய்!!! தாயை
முதலில் பேணச்
சொன்னாய்!!! பெற்ற
மழலை முகம்
காணச் சொன்னாய்!!!
"உன் வாழ்க்கை
தான் உனக்கு
முக்கியம்" என்றாய்!!!
அவன் மனதில்
தலைவனாய் நின்றாய்!!!
மொத்தத்தில் அவனைப்
போல் அனைவரின்
இதயம் வென்றாய்!!!
அரிதாரம் பூசி
உந்தன் அழகை
மறைத்த நீ,
கோடிகளைத் தொட்ட
பின்னும் - உன்
உள் அழகைப்
பேணுகிறாய்!!!
நாளைய முதல்வன்
என்று நவிலும்
பலர் முன்னால்
"நாயகன் நான்"
என்று தம்பட்டம்
அடிக்காமல், ஒரு
புதல்வனாய்த் (தலைமகனாய்த்)
தவழுகிறாய் திரைத்தாயின்
கலைமடியில்!!! சிலிக்கான்
திரையினில் என்றும்
ஒரு இந்திரன்
நீ - எங்கள்
மனதில் எல்லாம்
மிளிரும் எந்திரன்
நீ!!! அகவை
அறுபதைக் கொண்டாடும்
நாள் இன்று...
"உன் வழி
தனி" என்று...
எல்லோரும் உணர்வதே
நன்று!!! "அவன்"
காட்டும் வழியினிலே
அமைதியாய் நீ
பயணிக்க, உனக்கென்று
ஒரு வாழ்வை
இனியேனும் நீ
வாழ, வழி
விட நான்
இறைவனை வேண்டுகிறேன்!!!
என்றென்றும் நீ
வாழி!!!

- கலைபிரியன்

Wednesday, December 8, 2010

தபால்காரராக வடிவேலு, வீட்டு சமையல்காரராக பார்த்திபன்... ஒரு கற்பனை...

வேகாத வெய்யிலில் (ஹய்யோ... ஹய்யோ, நாலு ரிஜிஸ்டர் தபால், நாலு மனி ஆர்டர், ரெண்டு தந்தி - இதக் கொண்டாந்து, இந்த சல்லிப் பயபுள்ளைகளுக்குத் தர்ரதுக்குள்ள, நம்ம ஆத்தாக் கிட்ட குடிச்ச பாலெல்லாம் வெளிய வந்துரும் பொருக்கே!!! நம்ம பேசாம, வாடிப் பட்டி ஆபீஸ்லயே குப்ப கொட்டிருக்கலாம்... எவவனையோ புடிச்சு, கைல கால்ல விழுந்து, செலவு செஞ்சு, நாலு காசு கூடக் கெடைக்குமேன்னு இங்க வந்தா, கடைசியில சொந்த செலவுலையே சூனியம் வச்சுக்குற கதையாவுல்ல இருக்கு!! ச்சை!!) தனக்குள்ளே பேசிக்கொண்டே தான் தந்தி கொடுக்க வேண்டிய அடுத்த வீட்டைத் தாண்டிப் போகிறார்...

"அட, இந்தாருக்கு  நம்பர் 12 !!!" சொல்லிக் கொண்டே பின்னால் வந்து, திறந்து கிடந்த கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே போகிறார்...

அய்யா, அய்யா - வீட்ல யாரும் இல்லையா... உள்ள வரலாமா?

பனியன், வேட்டி, குத்தாலம் துண்டு, கையில் கரண்டி சகிதமாக வேர்வையைத் துடைத்த படியே ஹாலுக்கு வருகிறார் பார்த்திபன்... பதில் கூறாமல் வெறித்துப் பார்க்கிறார்...

ஒன்னத்தான்யா, உள்ள வரலாமான்னு கேட்டேன்!!!

டேய்...

என்னது, டேயா?

ஆமாண்டா, லூசு...

ஹ்ம்... இதுக்கு அதுவே தேவலாம் போலையே...

நீ கேக்குற கேள்விய, வாசல்ல நின்னு கேக்கனும்டா? இன்னும் விட்டா பெட் ரூமுக்கு வந்து கேப்பியா?

சரிப்பா, தப்பாக் கேட்டுப்புட்டேன்... கோச்சுக்காத... என்ன, சமையலா இருந்தியா?

இல்ல, கொளுத்து வேலை பாத்துட்டு வர்ரேன்...

அது சரி, நமக்கு வெனை வேறெங்கயும் இல்ல, நம்ம வாய்க்குள்ளையே தேன் இருக்கு...

வாய்க்குள்ள வெனை எல்லாம் வேற இருக்கா? நாக்கு தானே இருக்கும், எங்க காட்டு?

ஏம்பா? ஒரு கேள்விய தப்பாக் கேட்டுப்புட்டேன்? அது தப்பா? அதுக்கு போயி, இப்புடி எடக்கு மடக்கா பேசுறியே?

மடக்குன்னா (கையை மடக்கிக் காட்டுகிறார்) தெரியும்... எடக்குன்னா, அது என்ன?

வந்த வேலைய விட்டு இன்னி ஒன்கிட்ட ஒரு கேள்வி கேட்டா, என்னைய பிஞ்ச செருப்பக் கொண்டு அடிப்பா... (தனக்குள் - "அய்யய்யோ, அய்யய்யோ, உணர்ச்சிவசப்பட்டு சொல்லிப் புட்டமே, சொல்லிப் புட்டமே - பய புள்ள நெஜமாவே அடுச்சுப்புடுவேன் பொருக்கே?" என்று சொல்லிக் கொள்கிறார்)... (முறைத்துப் பார்த்தபடி...) தந்தி வந்துருக்கு... கையெழுத்துப் போட்டு வாங்கிக்க...

நீ தானே வந்த, தந்தி வந்தத நான் பாக்கலையே?

ஷ், அப்பப்பப்பபா... இப்பவே கண்ணைக் கட்டுதே!!! முடியலடா, (அழுகிறார்) என்னால முடியல... நான் தாண்டாப்பா கொண்டாந்துருக்கேன் தந்தி... போதுமா?

அப்புடி சொல்லு... (கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொள்கிறார்...)

சரிப்பா, வர்ட்டா... (என்று சொல்லி விட்டு, நடையைக் கட்டுகிறார்)...

ஹலோ?

ம், இப்ப என்ன? (என்கிறார் திரும்பி)

வரட்டான்னு தானே கேட்ட? கேட்டு நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்க?

(கோபமாக)... ஏம்பா? ஏன்? எல்லாரும் வழக்கமா பேசுற மாதிரிதானே நானும் பேசுனேன்? என்னக் கண்டா மட்டும் ஏன் இந்த கொல வெறி? ஒங்காத்தா வயித்துக்குள்ள இருக்கும் போதே, என்னையக் கண்டா, எப்புடி எல்லாம் லந்து பண்ணலாம்னு யோசுச்சுக்குட்டே இருந்தியா? என்னது, சின்னப் புள்ளத் தனமா இருக்கு... ராஸ்கல்...போதும்பா, போதும்... இத்தோட நம்ம சங்காத்தத்த முடுச்சுக்குருவோம்... (என்று கூறிக் கொண்டே நடையைக் கட்டுகிறார் அங்கிருந்து)...

- கலைபிரியன்

Tuesday, December 7, 2010

பைத்தியம்!!!

தூங்காமல்
நான் கழித்த
ஒவ்வொரு
நிமிடமும்,
கனவாய் நீ
வருவாய்!!!
அன்பே -
கண்ணுறங்கி,
நான் அயர்ந்த
ஒவ்வொரு
மணித்துளியும்,
நினைவில் நீ
அலைவாய்!!!
உன்னை
அணைக்கையில்,
நான் உலகை
மறந்தேன்!!!
நீ, என்னை
மறுக்கையில்,
என் இதயம்
தொலைத்தேன்!!!
நான், சவரம்
செய்யாமல்
சுற்றித்
திரிகிறேன்...
நீயோ,
சமையல் கட்டினுள்
செட்டில்
ஆகிவிட்டாய்!!!
உன் பக்தனாய்
மட்டுமே என்னை
உணரும் நான் -
இன்று,
ஒரு பைத்தியம்!!!

- கலைபிரியன்

Monday, December 6, 2010

இன்றைய நடப்பு பத்தி, கவுண்டமணி/செந்தில் கற்பனை உரையாடல்... - II - தொடர்...

அண்ணே... அண்ணே...

ஷ்... அப்பப்பப்பப்பப்ப்பா... இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலைப்பா... சும்மா நொச்சு நொச்சுன்னு... சொல்ரா, கப்ளிங் தலையா...

பேப்பர் பாத்திங்களா...

இன்னும் இல்லடா, என்ன போட்ருக்கு, கொண்டா...

நம்ம பண்ணையாரு மவன் பழனில பிட் அடிச்சு பாஸ் பண்ணிட்டாராம்...

என்னது, அவரு வடக்கத்திலேயில்ல எங்கயோ படிக்குராப்ல... அப்புடியே இருந்தாலும், அவரு பிட் அடிச்சு பாஸ் பண்ணதெல்லாம் ஒரு நியூஸா வருதா?

இந்தோ, இங்க தான்... பாருங்க, படமெல்லாம் குட போட்ருக்கு...

இர்ரா, மூஞ்சில கடிச்சு வச்சுடாத... படிக்குறேன்... அடப் பாவி... இதுக்குதான், மழைக்காவது பள்ளிக் கூடத்துப் பக்கம் ஒதுங்கணுங்குறது...

அண்ணே, இப்படியெல்லாம் கேவலமா பேசாதிங்க, நாங்க எசுகேடட் பேமிலி...

என்னது, எச்சக்கல பேமிலியா?

என்ன தான் இருந்தாலும், நான் ரெண்டாப்பு பாசண்ணே... நீங்க பத்தாப்பு பெயிலு... நியாபகம் வச்சுக்குங்க...

டேய்... ஒன்கிட்ட எல்லாம், பேசி... ப்ச்....... ஐய்ய்ய்யோ... ராமா... ஏன் இந்த கழுசடப் பசங்கக்கிட்ட எல்லாம் என்னயப் பேச வைக்குர...

அது போகட்டும்ண்ணே, பாசு பாசு தான், பெயிலு பெயிலு தான்... பேப்பர்ல என்ன போட்ருக்கு, படிச்சீங்களா...

ஒன்னயெல்லாம் திருத்தவே முடியாது... டேய், அவரு "பிட்ஸ் பிலானி"ங்குற காலேஜுல படிச்சு நெறைய மார்க் வாங்கி பாஸ் பண்ணி இருக்காருண்ணு போட்ருக்குடா... நீ சொன்னா மாதிரிப் போயி ஊருக்குள்ள சொல்லிக்குட்டு திரியாத... ஒன்னோட ஆப் பாயில் வாய தச்சு வச்சுருவாணுவ...

இப்புடி வெவரமா சொல்லுங்க, அப்பத் தானே புரியும்...

ஒன்னயச் சொல்லி குத்தமில்லடா, தண்டோராத் தலையா... புள்ளைங்கள படிக்க வையுங்க படிக்க வையுங்கன்னு அந்த வாத்தி, வந்த நாளா, ஊருக்குள்ள கரடி மாதிரி கத்திக்குட்டு திரியுறான்... ஒரு பய கேக்குறது இல்ல... புள்ளைங்கள படிக்க வைக்காட்டி இலவச டிவி இல்லைன்னு சட்டம் கொண்டாறோனும்... அப்பத் தான் திருந்துவாங்க நம்மூரு ஜனங்க...

அண்ணே, படிச்சா ஏம்போட்டோ கூட பேப்பர்ல வருமாண்ணே...

டேய்... ஓடிப் போயிரு, இல்லாட்டி க்ரீச காச்சி வாயில ஊத்தீருவேன்...

- கலைபிரியன்

(Making it a series due to popular demand - look out for the next part soon and check out previous part @ http://kalaipiriyan.blogspot.com/2010/12/blog-post.html)

Friday, December 3, 2010

இன்றைய நடப்பு பத்தி, கவுண்டமணி/செந்தில் கற்பனை உரையாடல்...

அண்ணே, அண்ணே...

என்னடா, காலங்காத்தால, நொண்ணே, நொண்ணே... என்ன - பன்னி வறுத்துக் கொண்டாந்துருக்கியா?

இல்லண்ணே, காலைல பேப்பர் படிச்சதிலேருந்து மண்டையக் கொடையுதுண்ணே... ஒரே சந்தேகம்... அத்தான், பாத்து கிளியர் பண்ணிட்டுப் போகலாம்னு...

ரைட்டு... ரைட்டு... என்ன மாதிரி புத்திசாலின்னு இருந்தா இப்புடிப் பட்ட சந்தேகமெல்லாம் வர வேண்டியதான்... அது சரி, அதெல்லாம் மூளையுள்ளவனுக்கு தானே வரும்... நீ தான் ஹாலோ மண்டையனாச்சே... ஒனக்கெல்லாம் எப்பிடி...

பாத்திங்களா, தேடி வந்தா, கிண்டல் பண்றிங்களே...

சரி, நமக்குள்ள இதெல்லாம் சகஜம் தானே - சொல்றா ஐஸ் ப்ரூட் வாயா...

இத்தனை நாளா வெறும் கொல, கொள்ளனு மட்டும் தான் வந்துக்கிட்டிருந்துச்சு... இப்ப என்னமோ ஊழல் ஊழல்ன்னு வந்துக்குட்டிருக்கே... அப்புடின்னா என்னண்ணே?

அதுவாடா தீச்சட்டி தலையா? போன வருஷம் உன்கிட்ட 1000 ரூபா குடுத்து வோட்டுக் குத்தச் சொன்னான்ல ஒருத்தேன்?

ஆமாண்ணே, நான் கூட அவன் சொன்னா மாதிரி பூத்துக்கு போய் அவன் சொன்ன மிசின்ல குத்தி, அந்த மிசின் ஒடஞ்சு போச்சு... அங்க உக்காந்து மை தடவிக்கிட்டிருந்த நம்ம வாத்தியாரு என் மண்டைல அடிச்சு பத்திவுட்டாரு...

அடப் பாவி, உன்கிட்ட கொஞ்சம் சூதானமா இருக்கனும்டா...

சரி விஷயத்துக்கு வாங்கண்ணே... அவனுக்கு என்ன?

அவன மாதிரி 234 பயலுவ, ஜெயிச்சு, பாரிஸ் கார்னர்ல கொடி கட்டுன பில்டிங்குக்கு போய், கலாட்டா ரகளை எல்லாம் பண்ணுவானுவ...

அத்தான், அந்த கட்டடத்த LIC பில்டிங் பக்கத்துல மாத்திட்டேங்களே?!

அட கருவாப் பயலே, அது எப்படா ஒனக்கு தெரியும்?

நம்மூரு பூசாரி மெட்ராஸ் போயிட்டு வந்தாருல்ல, அவரு சொன்னாரு...

பரவாயில்லயேப்பா, அவன ஒரு இத்துப் போன பயன்னு நெனைச்சேன்... இவ்வளவு மேட்டர் வச்சுருக்கானா அவன்... சரி கெடக்குது கழுத, நம்ம விஷயத்துக்கு வருவோம்... இதே மாதிரி, 39 பேரு தமிழ் நாட்லேருந்து டில்லிக்கு போய் மத்த ஊர்லேருந்தெல்லாம் வர்ற இன்னொரு ஐநூத்திச் சொச்சம் பேரோட கலாட்டா ரகளை எல்லாம் பண்ணுவானுவ...

கலாட்டா ரகளையெல்லாம் பண்ணுனா போதுமா, வயித்துப் பாட்டுக்கு என்ன செய்வாங்கண்ணே?

அடங்கொண்ணியா, கரெக்டா கவ்விட்ட பாத்தியா... ஒன்ன மாதிரி ஈத்த பீத்த பயலுவளுக்கெல்லாம் குடுத்த ரூவாய எல்லாம் வசூல் பண்ணோனும்ல, அதுனால, ரோடு போடற காண்ட்ராக்டு, பஸ் ஸ்டாண்டு கட்டுரது, கரண்டு கம்பம் நடுறது, தூரு வார்றது, தண்ணி கனக்ஷன் குடுக்குறது, லைசன்ஸ் குடுக்கறதுல ஆரம்பிச்சு பத்திரம் பதியுறது வரைக்கும்... எல்லா விஷயத்துக்கும், கண்டிஷனா கமிஷன் வாங்குரானுவ, கம்மினாட்டி பயலுவ... இது தாண்டா ஊழல். புரியுதா?

புரியுதுண்ணே, ஆனா, பப்ளிக் கக்கூஸ் கட்டுரத விட்டீங்களே?

அட நாறப் பயலே... எவ்வளவு சொன்னாலும் அதத் தாண்டி ஒனக்கு ஒரு எழவும் வெளங்க மாட்டேங்குதே... ஆமா, நீ என்ன பண்ணுவ - அதுலயும் சேத்து தானே ஊழல் பண்றானுவ...

இப்ப நல்லாப் புரியுதுண்ணே... இதெல்லாம் ஒழியனும்னா என்னண்ணே பண்ணனும்?

மொதல்ல போய் பல்லைத் தேயுடா... நீயும் நானும் என்ன ஐநா சபையா, இதப் பேசிப் பைசல் பண்றதுக்கு?

- கலைபிரியன்