வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Thursday, January 27, 2011

இந்தியாவின் நவீன இமயம்!!!

நான்கரை சொச்சம் அடி நிரம்பிய
நவீன இமயம் நீ தான்!!!
தடுப்பாட்டம் தொடங்கி, எதிரியைத்
தகர்த்தாடும் திறன் வரை,
எல்லாம் கொண்ட நீ...
துடுப்பெடுத்து ஓடி வந்தால்,
துடித்துக் கிடக்கும் எங்கள் மனம்!!!
நிறை குடம் நீ என்று
பறை சாற்றும் உந்தன் குணம்!!!
எவரஸ்ட் உச்சியை தொடாத
நான், உன் சாதனை சிகரத்தை
உச்சி முகரும் ரசிகன்!!!
சிரிப்பை சுமந்து கொண்டே
சூர சம்ஹாரம் செய்வது, உனக்கே
உரித்த கலை; எதிரி,
விழுவது உந்தன் வலை!!!
அவன் சுமந்து வருவது
பந்தை அல்ல, முன்
பிறப்பில் செய்த பாவத்தை!!!
உன்னை தழுவ முயற்சி
செய்து கொண்டிருக்கிறதாம் உலகக்
கிண்ணம்!!! அது உன்னை
நழுவாமல் அடைந்தால் மலரும்
உன் குழி விழும் கன்னம்!!!
கோடிக் கணக்கான இதயங்கள்
மகிழும் என்பது திண்ணம்!!!
பாரத ரத்னா உன்னை
நோக்கி ஓடி வருவதாய்
அறிகிறேன்!!! பார்ப்போம்,
அந்த உயரிய பட்டம்,
தனக்கே என்று மகுடம்
சூட்டிக் கொள்கிறதென்று!!!

- கலைபிரியன்

No comments: