வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Thursday, January 20, 2011

என் அழகுப் பதுமையே?!

உன் கண்களிரண்டும் -
கம்பன் வீட்டுக்
கட்டுத் தறி...
அவை சொல்லாமல்
சொல்லும் ஒவ்வொரு
சொல்லும்... மொழிசாரா
இலக்கியம்!!!
இமைகள் இரண்டிலும்,
இமாலயக் குளுமை!!!
இரு பனிக்
குவியல்களுக்கிடையே...
புதைந்திருக்கும் விழிகளோ,
காஷ்மீரத்து திராட்சைகள்!!!
அவற்றின் அசைவிற்குத்தான்
எத்தனை ஆயிரம்
அர்த்தங்கள்!!!
மௌனமாய்ப் பகரும்
மறுமொழிகள், கோபமாய்
வீசும் கணைகள், ஆசையாய்ப்
பாயும் கடலலைகள்,
செல்லமாய்ச் சிணுங்கும்
சீண்டல்கள், சோகம்
சொல்லும் கேவல்கள்,
சோர்வைச் சொல்லும்
சுமைகள், அன்பைச்
சொரியும் வெட்கம்,
கருணை பொங்கும்
கனிவு, பக்திக்கு
மூடும் இமைகள்...
இன்னும் பலப்பல
விஷயங்கள், உன்
விழிகளில் வீற்றிருக்க...
பேசி ஏன் கொல்கிறாய்,
என் அழகுப் பதுமையே?!!

1 comment:

Mookku Sundar said...

ம்..கல்யாணம் fix ஆயிடுச்ச்சா.?