வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Monday, January 31, 2011

நீண்டது, ஒரு "கை"!!!

ன்றாடம்
அழுவதற்கென்றே
நேரம் ஒதுக்கி
வாழ்கையில்,
அரவணைக்க -
நீண்டது,
ஒரு "கை"!!!
ற்றாமை
என்னை
விழுங்கி
ஜீரணித்து விட்ட
வேளையில்,
ஆதரவுடன் -
நீண்டது,
ஒரு "கை"!!!
யலாமை
தொற்றிக் கொண்டு
இறுக்கி
நெரித்த போது,
இசைவாக -
நீண்டது,
ஒரு "கை"!!!
"சா,
ஏனிந்தக்
கொடுமை"
என்றழுத போது,
ஈகையுடன் -
நீண்டது,
ஒரு "கை"!!!
றக்கமின்றி
உழற்றும்
நிலை
வந்த போது,
உற்சாகமாய் -
நீண்டது,
ஒரு "கை"!!!
சலாடி
உள்ளம்,
அங்குமிங்கும்
அலைபாயும் போது,
ஊக்கமளிக்க -
நீண்டது,
ஒரு "கை"!!!
திர்நீச்சல்
மட்டுமே
எஞ்சி
இருக்கையில்,
எழுப்பி விட -
நீண்டது,
ஒரு "கை"!!!
க்கம்,
எந்தன்
ஆக்கத்தைக்
கவ்விக் கொள்ள,
ஏற்றம் தர -
நீண்டது,
ஒரு "கை"!!!
ந்தெழுத்து
நிரம்பிய
அந்தக் "கை"...
ளிமயமான
எதிகாலத்தை,
சையின்றி
ஏந்தி வரும்...
ஒளவைப் பாட்டி
தொடங்கி, அனைவரும்
ஓதிய...

நம்பிக்"கை"!!!

- கலைபிரியன்...

No comments: