அன்றாடம்
அழுவதற்கென்றே
நேரம் ஒதுக்கி
வாழ்கையில்,
அரவணைக்க -
நீண்டது,
ஒரு "கை"!!!
ஆற்றாமை
என்னை
விழுங்கி
ஜீரணித்து விட்ட
வேளையில்,
ஆதரவுடன் -
நீண்டது,
ஒரு "கை"!!!
இயலாமை
தொற்றிக் கொண்டு
இறுக்கி
நெரித்த போது,
இசைவாக -
நீண்டது,
ஒரு "கை"!!!
"ஈசா,
ஏனிந்தக்
கொடுமை"
என்றழுத போது,
ஈகையுடன் -
நீண்டது,
ஒரு "கை"!!!
உறக்கமின்றி
உழற்றும்
நிலை
வந்த போது,
உற்சாகமாய் -
நீண்டது,
ஒரு "கை"!!!
ஊசலாடி
உள்ளம்,
அங்குமிங்கும்
அலைபாயும் போது,
ஊக்கமளிக்க -
நீண்டது,
ஒரு "கை"!!!
எதிர்நீச்சல்
மட்டுமே
எஞ்சி
இருக்கையில்,
எழுப்பி விட -
நீண்டது,
ஒரு "கை"!!!
ஏக்கம்,
எந்தன்
ஆக்கத்தைக்
கவ்விக் கொள்ள,
ஏற்றம் தர -
நீண்டது,
ஒரு "கை"!!!
ஐந்தெழுத்து
நிரம்பிய
அந்தக் "கை"...
ஒளிமயமான
எதிகாலத்தை,
ஓசையின்றி
ஏந்தி வரும்...
ஒளவைப் பாட்டி
தொடங்கி, அனைவரும்
ஓதிய...
நம்பிக்"கை"!!!
- கலைபிரியன்...
அழுவதற்கென்றே
நேரம் ஒதுக்கி
வாழ்கையில்,
அரவணைக்க -
நீண்டது,
ஒரு "கை"!!!
ஆற்றாமை
என்னை
விழுங்கி
ஜீரணித்து விட்ட
வேளையில்,
ஆதரவுடன் -
நீண்டது,
ஒரு "கை"!!!
இயலாமை
தொற்றிக் கொண்டு
இறுக்கி
நெரித்த போது,
இசைவாக -
நீண்டது,
ஒரு "கை"!!!
"ஈசா,
ஏனிந்தக்
கொடுமை"
என்றழுத போது,
ஈகையுடன் -
நீண்டது,
ஒரு "கை"!!!
உறக்கமின்றி
உழற்றும்
நிலை
வந்த போது,
உற்சாகமாய் -
நீண்டது,
ஒரு "கை"!!!
ஊசலாடி
உள்ளம்,
அங்குமிங்கும்
அலைபாயும் போது,
ஊக்கமளிக்க -
நீண்டது,
ஒரு "கை"!!!
எதிர்நீச்சல்
மட்டுமே
எஞ்சி
இருக்கையில்,
எழுப்பி விட -
நீண்டது,
ஒரு "கை"!!!
ஏக்கம்,
எந்தன்
ஆக்கத்தைக்
கவ்விக் கொள்ள,
ஏற்றம் தர -
நீண்டது,
ஒரு "கை"!!!
ஐந்தெழுத்து
நிரம்பிய
அந்தக் "கை"...
ஒளிமயமான
எதிகாலத்தை,
ஓசையின்றி
ஏந்தி வரும்...
ஒளவைப் பாட்டி
தொடங்கி, அனைவரும்
ஓதிய...
நம்பிக்"கை"!!!
- கலைபிரியன்...
No comments:
Post a Comment