உண்மை பேச மறுப்பவன், "நா" இருந்தும் "ஊமை"...
சூழ்ச்சிக்கு செவிமடுப்பவன், "காது" இருந்தும் "செவிடன்"...
கேடுகளை மட்டுமே காண்பவன், "கண்கள்" இருந்தும் "குருடன்"...
ஓடி ஆடி உழைக்காதவன், "கை கால்கள்" இருந்தும் "ஊனமுற்றவன்"...
"ஊனமுற்றவன்" என்று நாம் யாரைப் பார்த்துச் சொல்லித் திரிகிறோமோ,
உண்மையில், அவனே, இறைவனின் ஞானம் பெற்றவன்...
அவன் தான் மனதில் ஈரமும், மானமும் ஒருங்கே உள்ளவன்...
அவனிடம் கருணை கொண்டு, இனியாவது வாழ்வோம், ஊனமில்லாதவர்களாய்!!!
- கலைபிரியன்
சூழ்ச்சிக்கு செவிமடுப்பவன், "காது" இருந்தும் "செவிடன்"...
கேடுகளை மட்டுமே காண்பவன், "கண்கள்" இருந்தும் "குருடன்"...
ஓடி ஆடி உழைக்காதவன், "கை கால்கள்" இருந்தும் "ஊனமுற்றவன்"...
"ஊனமுற்றவன்" என்று நாம் யாரைப் பார்த்துச் சொல்லித் திரிகிறோமோ,
உண்மையில், அவனே, இறைவனின் ஞானம் பெற்றவன்...
அவன் தான் மனதில் ஈரமும், மானமும் ஒருங்கே உள்ளவன்...
அவனிடம் கருணை கொண்டு, இனியாவது வாழ்வோம், ஊனமில்லாதவர்களாய்!!!
- கலைபிரியன்
No comments:
Post a Comment