வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Wednesday, February 2, 2011

யார் ஊனம்!!!

உண்மை பேச மறுப்பவன், "நா" இருந்தும் "ஊமை"...
சூழ்ச்சிக்கு செவிமடுப்பவன், "காது" இருந்தும் "செவிடன்"...
கேடுகளை மட்டுமே காண்பவன், "கண்கள்" இருந்தும் "குருடன்"...
ஓடி ஆடி உழைக்காதவன், "கை கால்கள்" இருந்தும் "ஊனமுற்றவன்"...

"ஊனமுற்றவன்" என்று நாம் யாரைப் பார்த்துச் சொல்லித் திரிகிறோமோ,
உண்மையில், அவனே, இறைவனின் ஞானம் பெற்றவன்...
அவன் தான் மனதில் ஈரமும், மானமும் ஒருங்கே உள்ளவன்...
அவனிடம் கருணை கொண்டு, இனியாவது வாழ்வோம், ஊனமில்லாதவர்களாய்!!!

- கலைபிரியன்

No comments: