
மை இட்டனர்
விரலில் -
ஒப்பமிட்டான்,
கருவி கண்டதும்
குழப்பம்...
கை நீட்டி
வாங்கிய
காந்தி -
பல்லிளித்தார்
பையிலிருந்து...
பொத்தானை
அழுத்திடத்தான்...
விரல் நீள
முனையும்
போது...
கரை
படிந்த
மனசாட்சி...
காரி
உமிழ்ந்தது...
இத்தனை
நாட்கள்
உன்னை ஏமாற்ற
யோசிக்காத
"இவர்"களை...
ஏமாற்ற
நீ - ஏன்
பட
வேண்டும் -
வெட்கம்...
கயவர்கள்
காந்தியை
நம்புவதே
துரோகம்
இழைக்கத்தான்...
அவர்கள்
கையில் இருந்து
அவன் பைக்கு
வந்த
காந்தி...
இனி ஒரு
முறை நாம்
ஏமாற்றப்
பயன்பட
மாட்டோம்...
என்றுதிர்த்த
புன்னகை
தான்...
அவனைக்
குழப்பியது...
அவர் வடிக்கும்
ஆனந்தக்
கண்ணீர்
வியர்வையாய் வடிகிறது -
கிழிந்த சட்டையில் ...
யோசித்தான் -
வட்டியும்
முதலுமாகத்
திருப்பிக் கொடுக்க
இதுவே சந்தர்ப்பம்...
உத்தமன் -
"49O" படிவத்தில்...
வாந்தி எடுக்கத்
தொடங்கினான் -
தன் மனசாட்சியை...
இன்னும் ஐந்து
வருடம்
கழித்துத்தான்
இனி மீண்டும் ஒரு
சந்தர்ப்பம்...
இனியாவது -
சிந்திப்பீர்
செயல்
படுவீர்...
No comments:
Post a Comment