வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Thursday, May 14, 2009

ஜாசியாவும் ஈழத் தமிழர்களும்...



"ஜாசியா" என்பது மற்ற மதத்தவர்களைக் காக்க முகலாயர் காலத்தில் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் விதிக்கப்பட்ட வரி ஆகும். வட மேற்கு பாகிஸ்தானில் வசிக்கும் சீக்கியர்களிடம், அந்தப் பகுதியை ஆக்கிரமித்துள்ள தாலிபான்கள், ஐந்து கோடி ரூபாய் ஜாசியா விதித்து, அதைக் கட்ட கெடுவும் விதித்துள்ளனர்.
"சரி. இதற்கும், ஈழத் தமிழர்களுக்கும் என்ன சம்மந்தம்" என்று கேட்கிறீர்களா?
இதற்காக இந்தியாவில், பஞ்சாபில் உள்ள அம்பாலா நகரில் மே முதல் வாரத்தில் இங்கு வசிக்கும் சீக்கியர்கள் சார்பாகப் போராட்டம் வெடித்தது. இந்த சமயம் தேர்தல் பிரசாரத்திற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மன் மோகன் சிங் "இது கவலை அளிக்கின்ற விஷயம். இது தொடர்பாக பாகிஸ்தான் தூதரை அழைத்து நமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளோம். அதோடு அல்லாமல், பாகிஸ்தான் அரசிடம் அதிகாரிகள் மட்ட அளவிலான பேச்சு வார்த்தையையும் தொடங்கி உள்ளோம். இது போன்ற வஷயங்களைக் கையாள்வதில் காங்கிரஸ் அனுபவமும் திறமையும் வாய்ந்தது" என்று பேசி அங்குள்ள காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்துள்ளார்.
ஆனால், தமிழ் நாட்டுக்கு சில மைல் தூரத்தில் வருடக் கணக்காக இனப் படுகொலைக்கும், பசி, பட்டினி, மனித உரிமை மீறல் மற்றும் பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாகும் நமது தொப்புள் கோடி உறவினர்களான ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை அரசிடம் பேச்சு வார்த்தை நடத்த மட்டும் அவர் தயாரில்லை. அது போகட்டும். மேற்கொண்டு அவற்றைத் தடை இன்றிச் செய்ய வட்டி இல்லா மற்றும் குறைந்த வட்டிக் கடன், ஆயுத, தளவாட மற்றும் தொழில் நுட்ப உதவிகளையும் தடை இன்றி செய்வதையும் கொள்கையாக வைத்திருக்கிறது இந்திய அரசு.
நாம் இங்கு போராடினால் மட்டும் "இலங்கை இறையாண்மை" என்றும் "பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறீர்கள்" என்றும் சப்பைக் கட்டுக் கட்டி "தேசியப் பாதுகாப்பு" சட்டத்தையும் பயன்படுத்தத் துணிகிறது அரசு. மத்தியில் ஆளுகின்ற அரசும் மாநிலத்தில் ஆளுகின்ற அரசும் ஒரே கூட்டணியில் இருந்தும் நமது நியாயமான, மனிதாபிமானம் மிக்க கோரிக்கைகளுக்குக் கூட செவி மடுக்க நம் நாட்டில் யாரும் இலலை என்ற நிலை. இந்த நிலையில் பிரசாரத்திற்கு வந்து தமிழக மக்களை சந்திக்கக் கூட தைரியம் இல்லாத பிரதமரையும் அங்கீகரித்திருக்கும் அவலம் வேறு எங்கு காணக் கிடைக்கும்.
ஒரு கண்ணில் வெண்ணை, மற்றொரு கண்ணில் சுண்ணாம்பா?!
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் பெற்ற பெரும் மற்றும் வரலாறு காணாத நூறு சதவிகித வெற்றியினால் டெல்லியில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தவர்களுக்கும், மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருப்பவர்களுக்கும் - அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்தன்மை உள்ளவர்கள் உங்கள் கட்சிகளிலும் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் நடுநிலையாளர்கள் எழுப்பும் கேள்விகள்:
ராஜீவ் காந்தியைக் கொன்ற விடுதலைப் புலிகளை ஆதரிக்கச் சொல்லியோ, அல்லது அவர்களுக்கு உதவச் சொல்லியோ தமிழக மக்கள் உங்களைக் கேட்டார்களா?
எங்களது தாய்மார்களும் சகோதரியர்களும் பாலியல் ரீதியாக சிங்கள ராணுவத்தால் எவ்வளவு துயரப் பட்டுள்ளார்கள் இது நாள் வரை? எத்தனை பேர் பொட்டிழந்து பூவிழந்து தவிக்கிறார்கள்? பிறந்து சில நாட்கள், சில மாதங்கள், சில வருடங்கள், இன்னும் பல நேரங்களில், பிறக்கக் கூட வாய்ப்பில்லாமல் எந்தனை பச்சிளங் குழந்தைகள், சிசுக்கள் கொல்லப் பட்டிருக்கின்றன? எத்தனை குடும்பங்கள் தலைவனை இழந்து அநாதைகளைத் திரிகிறார்கள் அகதிகளாக? என்னிலடங்காதவர்கள் ஊனமுற்று நோய் வாய்ப் பட்டு சிகிச்சைக்கும் முதலுதவிக்கும் வழி இன்றி வாழ்கிறார்கள்? பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டிய எத்தனை பிள்ளைகள் நித்தம் ஒரு பதுங்கு குழி என்று நாட்களைக் கடத்துகிறார்கள்? பிச்சைக் காரர்களையே பார்க்காத உழைப்பைத் தவிர வேறெதுவும் அறியாத எத்தனை பேர் அடுத்த வேளை சோற்றுக்காக வான் நோக்கிப் பொட்டலங்களுக்குக் காத்துக் கிடக்கிறார்கள்? பசியால், பஞ்சத்தால் எத்தனை உயிர்கள் பலியிடப் படுகின்றன அனு தினமும்? இவர்கள் வாழ்க்கைக்குக் குரல் கொடுப்பவர்கள் பிரிவினைவாதிகளா?
யோசித்துப் பாருங்கள்!!! நடக்காத மனித உரிமை மீறல்களுக்கே குரல் கொடுத்து வந்த வல்லரசுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரன்சு போன்ற நாடுகள் கூட இறங்கி வந்து ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் இந்த நேரத்தில், அண்டை நாட்டில் எல்லா உரிமையும் கடமையும் இருந்தும் வாய் மூடி இருந்தால், நாம் எல்லாம் மனிதர்கள் தானா? இப்படிப் பட்ட வெளியுறவுக் கொள்கைகளை வைத்துக் கொண்டு எப்படி வல்லரசாக உருவெடுக்க முடியும்?
இவ்வளவு கொடுமைகள் அருகாமையில் நடந்தேருகையில், ஒரு வேளை வல்லரசாக உருவெடுத்துவிட்டால் கூட, எத்தனை தமிழர்கள் தாங்கள் ஒரு இந்தியப் பிரஜை என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் பட்டுக் கொள்ள முடியும். அப்படி ஒரு நிலை வந்தால், "வேண்டுமென்றால் தமிழகத்தை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கூண்டில் அடைத்து விடலாம்" என்று கூட யோசிக்கக் கூடியவர்கள் தான் நீங்கள்!!!

No comments: