வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Saturday, November 13, 2010

என்ன அழகு, எத்தனை அழகு!!!


ஆங் சன் சூ க்யி

மக்களுக்காய்ப் போராடி, மனிதம் வென்றெடுக்க -
மலையே எதிர் வரினும்
மல்லுக்கு நின்ற நீ - ஒரு
மாதர் குல மாணிக்கம்
மங்காத ஒளி விளக்கு...

சர்வாதிகாரிகளை, சம்ஹாரம் செய்திடவே...
சமதர்ம நெறி ஓதி...
சத்தியம் போதிப்பாய் -
சட்டத்தின் ஆட்சி தனை,
சமைத்திடவே வழி செய்வாய்...

காந்தியின் பெண்ணுருவே, கண்மணியே -
விடுதலை ஆகி வந்த, வின் வெளியின்
வெண்ணிலவே - வெளிச்சம் நீ
உதிர்த்திடுவாய்... உன்
மக்கள் வாழ்ந்திடவே...

பகோடாவின் பொக்கிஷமே, மியன்மாரின்
மின்சாரமே - பருவ மங்கையரைக்
காட்டிலும் நீ - பன்மடங்கு அழகன்றோ!!! உன்
உள்ளத்தின் உயரத்தை,
அளப்பதற்கும் வழியுண்டோ...

பர்மாவின் அமைத்க்காய் - உன்
வாழ்வின் பாதி தனைப் பலி
கொடுத்தாய் - பல்லாண்டு நீ
வாழ - இயற்கை இனி
வழி விடட்டும்...

- கலை பிரியன்

No comments: