மை இட்டனர்
விரலில் -
ஒப்பமிட்டான்,
கருவி கண்டதும்
குழப்பம்...
கை நீட்டி
வாங்கிய
காந்தி -
பல்லிளித்தார்
பையிலிருந்து...
பொத்தானை
அழுத்திடத்தான்...
விரல் நீள
முனையும்
போது...
கரை
படிந்த
மனசாட்சி...
காரி
உமிழ்ந்தது...
இத்தனை
நாட்கள்
உன்னை ஏமாற்ற
யோசிக்காத
"இவர்"களை...
ஏமாற்ற
நீ - ஏன்
பட
வேண்டும் -
வெட்கம்...
கயவர்கள்
காந்தியை
நம்புவதே
துரோகம்
இழைக்கத்தான்...
அவர்கள்
கையில் இருந்து
அவன் பைக்கு
வந்த
காந்தி...
இனி ஒரு
முறை நாம்
ஏமாற்றப்
பயன்பட
மாட்டோம்...
என்றுதிர்த்த
புன்னகை
தான்...
அவனைக்
குழப்பியது...
அவர் வடிக்கும்
ஆனந்தக்
கண்ணீர்
வியர்வையாய் வடிகிறது -
கிழிந்த சட்டையில் ...
யோசித்தான் -
வட்டியும்
முதலுமாகத்
திருப்பிக் கொடுக்க
இதுவே சந்தர்ப்பம்...
உத்தமன் -
"49O" படிவத்தில்...
வாந்தி எடுக்கத்
தொடங்கினான் -
தன் மனசாட்சியை...
இன்னும் ஐந்து
வருடம்
கழித்துத்தான்
இனி மீண்டும் ஒரு
சந்தர்ப்பம்...
இனியாவது -
சிந்திப்பீர்
செயல்
படுவீர்...
என்னை நானே அறிமுகம் செய்தல் - எனக்குத் தெரியாது!!! எழுத்தும் பேச்சும் என்றென்றும் என்னைப் பிரியாது!!! என்னைத் தேடும் ஒரு முயற்சி தான் இந்தக் குவியல் - ஆம் - என் இன்டர்நெட் கிறுக்கல்!!!
வங்கே... பழகுவோம்யா...
வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!
No comments:
Post a Comment