வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Thursday, March 3, 2011

தேடல் தொலைக்காதே, மானுடா...


இரண்டாம் தேவன் தேடு
மூன்றாம் கண்ணைத் திற
நான்காவது உலகம் அமை
ஐந்தாவது வேதம் சமை
ஆறாவது தந்திரம் அறி
ஏழாம் சுவை போற்று
எட்டாவது அதிசயம் தெளி
ஒன்பதாம் திக்கில் தோன்று
பத்தாம் ரசமும் கல்...
மனசாட்சி மட்டும், என்றும் -
ஒன்றாய் இருக்கட்டும்...
பசித்திரு, விழித்திரு,
பண்பாடு போற்று,
நாகரிகம் நாடு, வாழ்வில்
தேடல் உள்ளவரை
சரித்திரம் புகழும் உனை...
ஆக்கம் தொலைத்துவிட்டால்,
அழிவை மட்டும் நினை...
ஊக்கம் வேண்டுமென்றால்
அறிவு மழையில் நனை!!!

- கலைபிரியன்

No comments: