இரண்டாம் தேவன் தேடு
மூன்றாம் கண்ணைத் திற
நான்காவது உலகம் அமை
ஐந்தாவது வேதம் சமை
ஆறாவது தந்திரம் அறி
ஏழாம் சுவை போற்று
எட்டாவது அதிசயம் தெளி
ஒன்பதாம் திக்கில் தோன்று
பத்தாம் ரசமும் கல்...
மனசாட்சி மட்டும், என்றும் -
ஒன்றாய் இருக்கட்டும்...
பசித்திரு, விழித்திரு,
பண்பாடு போற்று,
நாகரிகம் நாடு, வாழ்வில்
தேடல் உள்ளவரை
சரித்திரம் புகழும் உனை...
ஆக்கம் தொலைத்துவிட்டால்,
அழிவை மட்டும் நினை...
ஊக்கம் வேண்டுமென்றால்
அறிவு மழையில் நனை!!!
- கலைபிரியன்
No comments:
Post a Comment