வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Wednesday, March 9, 2011

கேள்விப்பட்டது...

சமீபத்தில் ஒரு சொற்பொழிவைக் கேட்க நேர்ந்தது... அதில் நான் கேட்ட இரண்டு மிகச் சிறந்த கவிகளின் வாழ்வில் ஏற்பட்ட மிக சுவாரஸ்யமான சம்பவங்களை இவ்விடுகையில் பதிவு செய்ய விழைகிறேன்...

1. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற இவர்,  இளம் பிராயத்தில், கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவர். அவர்கள் இல்லத்தில் ஒரு பழக்கம். யாருக்கேனும் பிறந்த நாள் என்றால், வீட்டுக் கூடத்தின் நடுவே வைக்கப் பட்டுள்ள ஏட்டில், எல்லோரும் தத்தம் வாழ்த்துக்களை, பிறந்தநாள் கொண்டாடுவோருக்குப் பதிவு செய்ய வேண்டும். அவரின் பிறந்த நாள் அன்று அவரது தாயார் என்ன எழுதினார் தெரியுமா? - "ஆண்டவா, எனது மற்ற பிள்ளைகள் எல்லாம் மருத்துவர், வக்கீல், பொறியாளர் என ஏதோ வகையில் பொறுப்பானவர்களாக திகழ்கிறார்கள். இவன் மட்டும் ஏனோ கவிதை. கவிதை என்று பொழுதைக் கழிக்கிறானே... இவன் விரைவில் வாழ்வில் உருப்படியாக ஏதேனும் செய்ய அருள் புரியுங்கள், இறைவா..." என்று தனது விருப்பத்தையும், வேண்டுதலையும், வாழ்த்தையும், ஒரு கவலையான தாயின் கோணத்தில் பதிவு செய்திருந்தார்...

இது நடந்து கிட்டத் தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், நமக்கு அந்தக் குடும்பத்திலிருந்து நீங்காமல் நினைவில் இருப்பவர், இந்தக் கவி மட்டும் தான். அந்தக் குடும்பத்தில், மற்றவர்கள் அன்றைய நிலையில் எவ்வளவு பெரிய சாதனையாளர்களாக இருந்திருந்தாலும், அவர்கள் யாரையும் நாம் நினைத்துக் கூடப் பார்க்க வாய்ப்பில்லை. "உனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை, விருப்பு, வெறுப்பு, இகழ்ச்சி, புகழ்ச்சி, மற்றவர்கள் கருத்தின் அடிப்படையில் இல்லாமல், உன்னுடைய மனசாட்சியின் படி, பின் தொடர்ந்து, முயற்சி செய்து நிறைவேற்றுவாயாயின், அதுவே சுயதர்மத்தின் அடிப்படையில் நீ வாழ்பவன் என்பதற்கு அடையாளம்" என்ற கீதோபதேசத்துக்கேற்ப வாழ்ந்த அந்தக் கவி...

இரண்டு நாடுகளுக்குத் தேசிய கீதம் படைத்த, (ஆம் - உலகில் வேறு யாருக்குமே இல்லாத புகழ் இவருக்கு உண்டு - இந்தியாவுக்கும், வந்காளதேசத்துக்கும், இவர் எழுதிய பாடல்கள் தான் தேசிய கீதங்கள்), "ரபீந்திரநாத் தாகூர்"...

2. இளம் வயதில் மறைந்தவர் இவர். இவரது மனைவி, பின்னாளில் எழுதிய சுயசரிதையில் இவர்களது வாழ்வில் நிகழ்ந்த, ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பதிவு செய்கிறார். இருவரும் திருவனந்தபுரம் மிருகக் காட்சி சாலைக்குச் செல்கிறார்கள். கவி சற்று உணர்ச்சி (எவ்வித உணர்ச்சியாக இருந்தாலும்) மிகுதியானவர். புலிக் கூண்டுக்கு அருகில் அவர்கள் செல்கையில், புலி தூங்கிக் கொண்டிருந்தது. நமது கவி அதனருகில் சென்று, "நீ காட்டுக்கு ராஜா, நான் நாட்டுக்கு ராஜா... ஹை... ராஜாவுக்கு ராஜ தொட்டுப் பேசிக்கொள்ளலாமா..." என்று கூண்டுக்குள் கை விட்டுத் தொடப் போனார்... மனைவிக்கு வியர்த்துப் போனது... அவரிடம் பயம் வேறு... மெதுவாக அவரிடம்.. "அதெல்லாம் வேண்டாமே, எதனா ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடப் போறது..." என்று சொல்லியிருக்கிறார்... "நீ சும்மா இரு..." என்று செல்லமாகக் கடிந்து கொண்டு, தொடும் தன் முயற்சியைத் தொடர்ந்தார் கவி... மனைவி தன் மனதுக்குள்ளேயே எண்ணிக் கொண்டாராம் - "அய்யோ, ஆண்டவா... இவருக்கு இல்லா விட்டாலும், அந்தப் புலிக்காவது நல்ல புத்தியைக் கொடு" என்று...

பதிவு செய்தவர் - "செல்லம்மாள் பாரதி" கவி - "மகாகவி சுப்ரமணிய பாரதி"

- கலைபிரியன்

No comments: