வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Tuesday, March 22, 2011

குறிச்சிடுங்க அவுக தேதிய...

பிள்ளையார் கோவிலில் அருகம் புல் கொடுக்காக - எல்லாப் பிணிகளையும் போக்க வல்லதாம்...
சிவன் கோவிலில் வில்வ இலை தந்தாக - நீரிழிவு நோயே வராமல் செய்வதாம்...
பெருமாள் கோவிலில் துளசி தாராக - சளி ஏதும் அண்ட விடாதாம்...
மேலும் கொடுத்தாக பச்சைக் கற்பூரத் தீர்த்தம் - நீரின் கிருமிகளை நிர்மூலமாக்கிடுமாம்...

சாமிக்குக் கும்பிடு போட்டாப் பிணி தீராதுன்னு, பகுத்தறிவுப் பகலவன் சொல்றாக...
அதுக்குப் பதிலா, கும்புடு போடுற ஆசாமிக்கு வோட்டுப் போட்டா,
இலவசமா நிலவத் தாரமுன்னும் சொல்லுறாக...கேட்டுக்குங்க சேதிய...
இனியாவது குறிச்சிடுங்க அவுக தேதிய... ஏப்ரல் 13... தேர்தல் நாள்...

- கலைபிரியன்

No comments: