வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Wednesday, March 9, 2011

விவாதக் களம் I... வள்ளுவன் பெண்ணுரிமையில் வரலாற்றுப் பிழை செய்துவிட்டானா?

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்"

என்று ஆண்பாலைச் சுட்டி வள்ளுவன் எழுதிய குறளின், அதே பொருளுக்கொத்த பாரதியின் பாடற் பகுதி...

"... மெச்சி உனை ஊரார் புகழும் போதே, என் மேனி சிலிர்க்குதடி..."

எனப் பெண்டிரைச் சுட்டிப் பாடியிருக்கிறான் முண்டாசுக் கவிஞன்.

வள்ளுவனின் பிழையைச் சரி செய்யவே இப்பதிவை பாரதி செய்தானா?

வள்ளுவனுக்கென்ன பாலைக் குறிக்காமல் கருத்தைப் பதிவு செய்ய வார்த்தைக்கா பஞ்சம்? எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது... உங்கள் கருத்துக்களை இவ்விடுகையின் மறுமொழியாகப் பதிவு செய்யுங்களேன்?

- கலைபிரியன்

No comments: