வங்கக் கடலில் சுனாமியாய் வந்தால்,
வாரிச் சுருட்டி ஓடும் நீங்கள்... வீட்டு
வாசற் குழாயில் நான் வரும்போது மட்டும்
வால் தனத்தைக் காட்டுவதேன்?
கார்மேகத்தின் கண்ணீர்த் துளி நான்...
கரைந்தால் மழை, கதறினால் வெள்ளம்...
என்னை வரச் சொல்லித் தூது விடும் மரங்களை
நீங்கள் வெட்ட, கனக்கிறது என் உள்ளம்...
வங்கிக் கணக்கில் துட்டுச் சேர்க்கும் நீங்கள்,
மண்ணின் மாடியிலிருந்து என்னை மட்டும்
ஒரு சொட்டு விடாமல் உரிந்துவிடுவதில்
தான் என்ன நியாயம்? - சொல்லுங்கள்...
வரவுக்கேத்த செலவு, வாழ்க்கையெல்லாம் மகிழ்வு...
சிந்தியுங்கள்... என்னை, இனியாவது சேமியுங்கள்...
- கலைபிரியன்
வாரிச் சுருட்டி ஓடும் நீங்கள்... வீட்டு
வாசற் குழாயில் நான் வரும்போது மட்டும்
வால் தனத்தைக் காட்டுவதேன்?
கார்மேகத்தின் கண்ணீர்த் துளி நான்...
கரைந்தால் மழை, கதறினால் வெள்ளம்...
என்னை வரச் சொல்லித் தூது விடும் மரங்களை
நீங்கள் வெட்ட, கனக்கிறது என் உள்ளம்...
வங்கிக் கணக்கில் துட்டுச் சேர்க்கும் நீங்கள்,
மண்ணின் மாடியிலிருந்து என்னை மட்டும்
ஒரு சொட்டு விடாமல் உரிந்துவிடுவதில்
தான் என்ன நியாயம்? - சொல்லுங்கள்...
வரவுக்கேத்த செலவு, வாழ்க்கையெல்லாம் மகிழ்வு...
சிந்தியுங்கள்... என்னை, இனியாவது சேமியுங்கள்...
- கலைபிரியன்
No comments:
Post a Comment