வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Wednesday, March 16, 2011

பெரியாரின் பகுத்தறிவும் இன்றைய அரசியல் சூழ்நிலையும்...


பெரியார் பகுத்தறிவு குறித்து, ஒரு முறை, இப்படிப் பேசி இருக்கிறார் - "பகுத்தறிவு என்றால் என்ன? அறிவும் பகுத்தறிவும் வெவ்வேறாக இருக்க முடியாது. புலப் படுகின்ற விஷயத்தை அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து வல்லமை அடையும் பொழுது பகுத்தறிவு பிறக்கிறது" என்று. அதற்கு உதாரணமாக ஒரு கதையையும் கூறுகிறார் - குருவிடம் சீடன் வந்து கேட்கிறான், "குருவே, அறிவு என்றால் என்ன, விதி என்றால் என்ன?" என்று. குரு சொல்கிறார், "நான் சொல்வதைச் செய். பிறகு உனக்கு புலப் படும்", என்று. முதலில் ஒரு காலைத் தூக்கச் சொல்கிறார். அவ்வாறே தூக்கிவிட்டு, இன்னொரு காலால் நிற்கிறான் சிஷ்யன். அடுத்ததாக, அந்தக் காலையும் தூக்கச் சொல்கிறார். குரு சொல்வதைத் தட்ட முடியுமா. அதையும் அவன் எம்பித் தூக்க, "தடால்" என்று கீழே விழுகிறான். இப்போது, குரு சொல்கிறார், "ஒரு காலைத் தூக்கினால், இன்னொரு காலால் நிற்க முடியும் என்று உனக்குத் தெரிந்திருக்கிறது. இது அறிவு. இன்னொரு காலைத் தூக்கினால், நிற்க முடியாது என்று தெரிந்தும், நான் சொல்லியதால் செய்தாய் அல்லவா, இது விதி" என்று.

பெரியாரின் பாசறையில் உருவாகிப் பிளவு கண்டு உதித்த கட்சிகள் தான் தமிழ் நாட்டைப் பல்லாண்டு காலமாக ஆண்டு வருகின்றன. அவை தான் வரும் தேர்தலிலும் பிரதானக் கட்சிகளாகப் போட்டி போட இருக்கின்றன. அதில் ஒன்று பெரியாரின் பகுத்தறிவு சார்ந்த விஷயங்களைக் கை கழுவி வெகு நாட்கள் ஆகிவிட்டன. அதனை வெளிப்படியாகப் பிரகடனம் செய்யாத ஒன்றே குறையாகப் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது அந்தக் கட்சி. மற்றொன்று, இன்றைய ஆளும் கட்சி. தனக்கு வசதிப் படும் போது பகுத்தறிவுக் கொள்கைகளைப் பிரசாரம் செய்வதும், இல்லாத போது, இலை மறை, காய் மறையாக மூடப் பழக்க வழக்கங்களில் மூழ்கி முத்தெடுப்பதுமாய் சிறப்பாகக் கட்சி/ஆட்சி நடாத்திக் கொண்டிருக்கிறது. வருணாசிரமத்தை முற்றும் எதிர்த்த பெரியாரின் விரல் பற்றி அரசியல்/திராவிடம் கற்றதாகப் பெருமை பேசிக்கொள்ளும் அதன் தலைவர், கட்சியையும் ஆட்சியையும் வாரிசுகளுக்கு உயில் எழுதி வைக்காதது ஒன்று தான் பாக்கி. இது வருணாசிரமம் இல்லையா என்று யாராவது கேட்டால், அவர்களை "ஆரியவாள்" என்றும் "பார்ப்பன ஏகாதிபத்தியம் பரப்புவோர்" என்றும் எள்ளி நகையாடுவதில் மட்டுமே அவரது முத்தமிழ் மூளை இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்பதை விட, யாரை ஆட்சியில் மறுபடி அமர்த்தக் கூடாது என்று தான் பார்க்க வேண்டிய அவல நிலை வாக்காளர்களுக்கு. அவர்களுக்கும் பெரியார் சொல்லிய கதை ஒரு வகையில் பொருந்தும். ஸ்பெக்ட்ரம் தொடங்கி, ஊழல், வாரிசு அரசியல், கட்டப் பஞ்சாயத்து, மணற்கொள்ளை, நில அபகரிப்பு என எல்லா விஷயங்களையும் டீக்கடை தொடங்கிப் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்சாதனையூட்டப் பட்ட அறைகள் வரை பின்னிப் பெடல் எடுக்கும் அளவுக்கு அரட்டைக் கச்சேரிகளில் வல்லவர்களான வாக்காளர்கள், அறிவு படைத்தவர்கள் தான். இருந்தாலும், வாக்களிக்கும் போது, வாங்கிய பணத்தையும், வேட்பாளரின் சாதியப் பின்னணியையையும், தேர்தல் அறிக்கையின் இலவசக் கவர்ச்சித் திட்டங்களையும், இன்ன பிற விஷயங்களையும் எண்ணித் தங்களுடைய ஓட்டை வீணடிப்பது தான் அவர்களின் விதி.

- கலைபிரியன்

No comments: