வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Monday, March 21, 2011

தேர்தல் அறிக்கையில் வாக்காளர்கள் எதிர்பார்க்கும் பதில்கள்...

பரம ஏழைகள் என்ற ஒரு பிரிவே ஒழிக்கப் பட வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு அரசின்பால் மக்களுக்கு இருக்கையில், "பரம ஏழைகளுக்கு இலவசம்..." என்ற பகிரங்கமாகவே ஒரு ஆளுங்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பட்டியலிட்டு விளம்பரப்படுத்துவது மகா கேவலம். மேலும், கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் அவர்கள் அடைந்த தோல்வியையே இது பிரதிபலிக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க் கட்சியாக இருந்தாலும், மக்கள் அவர்களது தேர்தல் அறிக்கையில் எதிர்பார்ப்பது கீழ்க்காணும் கேள்விகளுக்கான பதில்களாகத் தான் இருக்க வேண்டுமே தவிர, இலவசங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பவர்களாக, வாக்காளர்கள், இனிமேலும் இருந்துவிடக் கூடாது.

கல்வியின் தரத்தையும், அதன் வியாபாரமயமாக்கலைத் தடுக்கவும் என்னென்ன செய்தீர்கள்?
விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க என்ன திட்டம் வகுத்தீர்கள்?
வேலைவாய்ப்பைப் பெருக்க நீவிர் செய்த செயல்கள் என்ன?
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்த எவ்வளவு ஒதுக்கினீர்கள்?
லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க என்ன செய்வதாய் உத்தேசம்?
மின்சாரம், சாலைகள் மற்றும் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்யும் திட்டங்கள் உங்கள் கைவசம் இருக்கிறதா?
விவசாயம் தழைக்க ஏதேனும் செய்ய முடியுமா?
தொழில் துறை வளர்ச்சியில் குஜராத் போன்ற மாநிலங்களுடன் தமிழகம் போட்டி போடா இயலுமா?
பெங்களூருக்கும் ஹைதராபாத்துக்கும் இணையான விமான நிலையம் சென்னையில் வருமா வராதா? இதனால் தொழில் துறையில் தமிழகம் வீழ்ச்சி அடைந்துகொண்டிருக்கிறதே?
காலை மாலை நேரங்களில் நகர்ப் புறப் போக்குவரத்து நெரிசலை எவ்வாறு சமாளிப்பது?
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற என்ன விதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?
பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கல்லவா இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்? சாதிய ரீதியில் வோட்டுக்காக இட ஒதுக்கீடு அளிப்பது எந்த விதத்தில் நியாயம்?
ஒரு லட்சம் கோடி ரூபாயான மாநிலத்தின் கடனை அடைக்க என்ன தான் வழி?
எங்களுக்கான மக்கள் பிரதிநிதி எத்தனை நாட்கள் தொகுதியில் இருப்பார்? எங்களுக்கான குறைகளை அவரிடம் நேரில் கூறி முறையிட இயலுமா?
மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடு ஒளிவுமறைவின்றி இருக்கவும், எதிர்க் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தால், அரசால் மக்கள் புறக்கணிக்கப் படாமல் இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப் படுமா?

- கலைபிரியன்

No comments: