தாயின் தண்ணீர்க் குடம் உடையத்
தளிர்களாய்த் தவழ்ந்தோம் நாம், இப்பூவுலகில்...
ஈரைந்து மாதங்கள் நம்மை, சுகமாய்ச் சுமப்பதற்கும்,
இரும்பு மனமன்றோ படைத்தாள் அன்று...
தமக்கையாய்த் தாங்கி நின்றாள், தங்கையாய்ப்
பாசம் காட்டித் தோழியாய்த் தினமும் வந்தாள்...
நம்மிடம் காதலியாய்த் தன்னை இழந்தவள்,
பின்னர் மனையாளாய் முற்றும் துறந்தாள்...
நமக்கவள் மகளாய்ப் பிறக்கையிலே, மட்டற்ற
மகிழ்ச்சி... மா தவம் வென்றது போல் ஒரு உணர்ச்சி...
கொடுத்துச் சிவந்த கரம் கர்ணனுக்குப் பின், நம்
வாழ்வில் வந்து போகும் மகளிர்க்குத் தானுண்டு...
தன்னைக் கொடுக்கும் தாய்க்குப் பின், அன்பைப்
பொழியும் தமக்கையாய்/தங்கையாய் உருப்பெற்று,
தோழியாய்த் தோள் கொடுத்துக், காதலியாய்க் கணை
தொடுத்து, மனையாளாய் மொத்தமும் தந்து...
பின்பு மகளாய்க் குலம் தழைக்கும் - மகளிற்கு வாழ்த்துச் சொல்ல,
நேரம் ஒதுக்குவோம் இன்று... மூன்றில் ஒரு பங்கை
ஒதுக்க (33%) அதிகாரம் நமக்கில்லை... நம் இதயத்தை
முழுதாய் ஒதுக்கிடுவோம் அவளுக்கென்று...
- கலைபிரியன்
1 comment:
கலை வெரியன் என்று மற்றும் ஒரு பெயர் வைத்து கொள்ளவும். :-)
- கிரிக்கெட்டைய் அம்மாவிற்கு இணையாக ஒப்பிடுவதை கண்டிக்கிறேன்,அதுவும் வன்மையாக.!
Post a Comment