வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Thursday, February 3, 2011

உன் விரலோரக் கவிதைகள்!!!

உன் விரல்களிலிருந்து
வெட்டப் பட்ட
மூன்றாம் பிறைகளில்,
ஒன்றைக் காணவில்லை
என்று, என்
பாழாய்ப் போன
மனதில், புலனாய்வுக்குழு
அமைத்துத் தேடுகிறேன்...
என் கையிலிருந்து
அதைத் தட்டிப்
பறித்துச் சென்ற
காற்றின் மீது,
குண்டர் தடுப்புச்
சட்டம் போடலாம்
என்று உத்தேசம்!!!
அதை ஒருகாலத்தில்,
பதம் பார்த்தது
உன்னுடைய பற்கள்
என்பதால், அவைக்கு
மட்டும் விதி விலக்கு!!!
அந்த விரலோரக்
கவிதை, வருடிப்
போன என்
விரல்களும், கன்னமும்
ஏக்கமாய்க் காத்துக்
கிடக்கின்றன, என்று
கிட்டும் என்று!!!

- கலைபிரியன்

No comments: