உன் விரல்களிலிருந்து
வெட்டப் பட்ட
மூன்றாம் பிறைகளில்,
ஒன்றைக் காணவில்லை
என்று, என்
பாழாய்ப் போன
மனதில், புலனாய்வுக்குழு
அமைத்துத் தேடுகிறேன்...
என் கையிலிருந்து
அதைத் தட்டிப்
பறித்துச் சென்ற
காற்றின் மீது,
குண்டர் தடுப்புச்
சட்டம் போடலாம்
என்று உத்தேசம்!!!
அதை ஒருகாலத்தில்,
பதம் பார்த்தது
உன்னுடைய பற்கள்
என்பதால், அவைக்கு
மட்டும் விதி விலக்கு!!!
அந்த விரலோரக்
கவிதை, வருடிப்
போன என்
விரல்களும், கன்னமும்
ஏக்கமாய்க் காத்துக்
கிடக்கின்றன, என்று
கிட்டும் என்று!!!
- கலைபிரியன்
வெட்டப் பட்ட
மூன்றாம் பிறைகளில்,
ஒன்றைக் காணவில்லை
என்று, என்
பாழாய்ப் போன
மனதில், புலனாய்வுக்குழு
அமைத்துத் தேடுகிறேன்...
என் கையிலிருந்து
அதைத் தட்டிப்
பறித்துச் சென்ற
காற்றின் மீது,
குண்டர் தடுப்புச்
சட்டம் போடலாம்
என்று உத்தேசம்!!!
அதை ஒருகாலத்தில்,
பதம் பார்த்தது
உன்னுடைய பற்கள்
என்பதால், அவைக்கு
மட்டும் விதி விலக்கு!!!
அந்த விரலோரக்
கவிதை, வருடிப்
போன என்
விரல்களும், கன்னமும்
ஏக்கமாய்க் காத்துக்
கிடக்கின்றன, என்று
கிட்டும் என்று!!!
- கலைபிரியன்
No comments:
Post a Comment