வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Monday, February 7, 2011

காங்கிரசுக்கும், சோனியாவுக்கும் ஒரு அறிவுரை!!!

செய்தி: தி.மு.க.,வுடன், தொகுதி பங்கீடு குறித்து பேச, ஐந்து பேர் கொண்ட குழுவை, காங்கிரஸ் அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மற்றும் ஜெயக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர், இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஒப்புதலுடன், மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், டில்லியில் இக்குழுவை இரவு அறிவித்தார்.

கண்ணோட்டம்: முதலில், இந்த ஐந்து தலைவர்களும், கிடைக்கும் தொகுதிகளில், தத்தம் கோஷ்டிக்கு எவ்வளவு சதவீதம் என்று முடிவு செய்ய, மூவர் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அந்தப் பஞ்சாயத்தை முடித்துவிட்டு, அப்புறமாகக் கலைஞரிடம் சென்று பேசட்டும். இல்லாவிட்டால், இந்தப் பஞ்சாயத்தையும், தள்ளாத வயதில், தமிழினத் தலைவரே சமாளிக்க வேண்டி வரும். அப்புறம், குரங்கு அப்பத்தைப் பங்கு வைத்த கதையாகிவிடும். முடிவுக்குப் பின் "அய்யய்யோ, வட போச்சே!" என்று ராகுல், வடிவேலு மாதிரிப் புலம்ப வேண்டியது தான்...

No comments: