வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Tuesday, February 8, 2011

முதல்வரின் ஷூவை துடைத்த பாதுகாப்பு அதிகாரி

ஒரு மாநிலத்தில், காவல்துறை உயர் அதிகாரியாக இருக்கக் கூடியவர், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் அவர், யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக, முதல்வரின் செருப்பைத் தன் கைக்குட்டையால் துடைக்கிறார். அதைச் சற்றும் கண்டு கொள்ளாதவராக, முதல்வரும் மற்ற அதிகாரிகளுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். உத்தரப் பிரதேசத்தில், அரசு நிகழ்ச்சிக்காக ஹெலிகாப்டரில் ஒரு கிராமத்திற்கு முதல்வர் வந்திறங்கியபோதுதான் நிகழ்ந்தது இந்தக் கொடுமை. ஊடகங்களின் வாயிலாக இந்தச் செய்தி அறிந்து பதறிப் போயிருப்பார்கள், இன்றளவிலும் காவல் துறையின் மீது மதிப்பு வைத்திருக்கும் யாவரும். அந்த அதிகாரியின் பணிக் காலம் அண்மையில் முடிந்து, அதனை, முதல்வர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீட்டித்துக் கொடுத்திருக்கிறார் என்பது கூடுதல் செய்தி. தான் வகிக்கும் பொறுப்பான/கண்ணியமான பதவிக்கு சற்றும் ஒவ்வாத இந்த இழி செயலைப் புரியத் துணிகிறார் அந்த அதிகாரி என்றால், அவர் வகிக்கின்ற அந்தப் பதவியால், அந்த முதல்வரால், அவர் பெறுகின்ற பயனானது, நேர்மையாகக் கடமையாற்றி ஓய்வு பெற்றிருந்தால் அவருக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை, என்பதை எல்லோராலும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். ஆயிரமாயிரம் காவல்துறைக் கனவுகளை நெஞ்சில் சுமந்து, அங்கிகளை உடலில் சுமந்து கண்ணியமாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் இளம் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் இது போன்ற செயல்கள் தவறான முன்னுதாரணங்களாகி  விடுகின்றன. ஆட்சிக் கட்டிலை அலங்கரிப்பவர்கள், கல்வியிலும், துறை சார்ந்த திறமையிலும் தங்களை விட எவ்வளவு தாழ்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களை வருடிப் பிழைத்தால் மட்டுமே, தத்தம் பணிகளில் மேன்மை அடைய முடியும் என்ற பாடத்தை இது போன்ற நிகழ்வுகளைத் திரும்பத் திரும்பக் கண்டு கற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். இந்த நிலையை மாற்றக் காவல் துறையை ஏவல் துறையாக மாற்றும் அரசியல்வாதிகள் மாறினால் மட்டும் போதாது. தங்களது தேவைகளையும், பதவி சார்ந்த உயர்வுகளையும் பெறத் தங்கள் திறமையையும், நேர்மையையும், கண்ணியத்தையும் மட்டுமே நம்பாமல், அரசியல்வாதிகளை நம்பி, அவர்களுக்குப் பணிவிடைகள் செய்வதன் மூலம் மேன்மை அடைய முடியும் என்ற எண்ணத்திலிருந்து அதிகாரிகளும் மாற வேண்டும். மாறுவார்களா?

- கலைபிரியன்

No comments: