தோன்றுவாய் நீ எனத்
தொடுவானம் பார்த்திருந்தேன்,
தை மாதம் நகர்ந்தபின்னும்
தேடித் திரிந்தேன்,
தெரியவில்லை, நீ எங்கென்று!
தூரலில் நனைந்து, நாம்
துள்ளித் திரிந்த நாட்கள்,
தீக் குச்சி சுண்டிவிட்டுத்,
திண்ணையில் கழித்த காலம், எல்லாம்
தாவி வந்தென், மனதைத்
தடவிச் செல்லுதடா...
"வந்துடுரேண்டா", என்று வாஞ்சையாய்ச்
சொல்லிவிட்டுப் போன, என்
நண்பா, என்று திரும்புவாய்
நீ, உன் விடுமுறை முடிந்து?
- கலைபிரியன்
தொடுவானம் பார்த்திருந்தேன்,
தை மாதம் நகர்ந்தபின்னும்
தேடித் திரிந்தேன்,
தெரியவில்லை, நீ எங்கென்று!
தூரலில் நனைந்து, நாம்
துள்ளித் திரிந்த நாட்கள்,
தீக் குச்சி சுண்டிவிட்டுத்,
திண்ணையில் கழித்த காலம், எல்லாம்
தாவி வந்தென், மனதைத்
தடவிச் செல்லுதடா...
"வந்துடுரேண்டா", என்று வாஞ்சையாய்ச்
சொல்லிவிட்டுப் போன, என்
நண்பா, என்று திரும்புவாய்
நீ, உன் விடுமுறை முடிந்து?
- கலைபிரியன்
No comments:
Post a Comment