வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Friday, February 4, 2011

நீ வருவாய் என...

தோன்றுவாய் நீ எனத்
தொடுவானம் பார்த்திருந்தேன்,
தை மாதம் நகர்ந்தபின்னும்
தேடித் திரிந்தேன்,
தெரியவில்லை, நீ எங்கென்று!
தூரலில் நனைந்து, நாம்
துள்ளித் திரிந்த நாட்கள்,
தீக் குச்சி சுண்டிவிட்டுத்,
திண்ணையில் கழித்த காலம், எல்லாம்
தாவி வந்தென், மனதைத்
டவிச் செல்லுதடா...

"வந்துடுரேண்டா", என்று வாஞ்சையாய்ச்
சொல்லிவிட்டுப் போன, என்
நண்பா, என்று திரும்புவாய்
நீ, உன் விடுமுறை முடிந்து?

- கலைபிரியன்

No comments: