ஒரு சில அரசியல்வாதிகளின் இன்றைய நிலைமையில், கற்பனையாக அவர்கள் பேசுவது போல எண்ணிப் பார்த்தேன்... படிங்க...
புதிதாக தோசைக் கடை ஆரம்பித்திருக்கும் ஆ. ராசா, எதிரில் காலிக் கடையில் தோசை சுட்டுக் கொண்டிருக்கும் தயாநிதி மாறனிடம் - "கண்ணா, நான் ஒரு தோசே சுட்டா, 176,000 கோடி தோசே சுட்டா மாதிரி... நீ எல்லாம் என்ன, ஜூஜூபி, வ்வர்ட்டா..."
ஐந்து நபர் குழுவில் இல்லாத இளங்கோவன் போராட்டம் நடத்தத் துவங்கியவுடன், தங்கபாலு, தன் சகாக்களிடம் - "டேய், ஆரம்பிச்சுட்டாங்கடா... இனி, ஒரு பக்கி சட்ட வேட்டியோட உருப்படியாப் போய்ச் சேர முடியாது... சூதானமா இருந்துக்குங்கடா... அம்புட்டு தான்... சொல்லிப் புட்டேன்... ஆமா..."
சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ், சிபிஐ மற்றும் பிரதமரிடம், அவ்வப்போது அவர்கள் அலுவலகத்துக்கு முன் வந்து நின்று கொண்டு, "முதல் மரியாதை" ஸ்டைலில் உடுக்கை அடித்துக் கொண்டே, "அய்யா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..."
கருணாநிதி, அண்ணா சமாதியில் தனிமையில் - "அண்ணைக்கே, உங்களுக்கப்புறம் நாவலரை வுட்ருந்தா, அண்ட்ராயராவது எஞ்சி இருக்கும்... இன்னைக்கு அதுக்கும்ல வேட்டு வச்சுருச்சு இந்த ஆக்கங்கெட்ட கூவ... மகன்னு செல்லம் கொடுத்தது தப்பாவுல்ல போச்சு... மாமியா கண்ணுல, நான் வெரல வுட்டு ஆட்டுனேன், ஒரு காலத்துல... இன்னிக்கு என்னடான்னா, எம் பய புள்ளைகளால, மருமகளும், பேரனும் என்னையப் பாடாப் படுத்திப் பச்சடி வைக்குதுங்களே... ஐயோ, ஆண்டவா..." சுத்தி முத்திப் பார்த்துவிட்டு, "நல்ல வேளை, எவனும் இல்லை... இல்லாட்டி, கருணாநிதியின் ஆத்திக முகம்னு எழுதி, உள்ளதுக்கும் வேட்டு வச்சுருவானுவ..."
கார்த்திக், கூட்டணிப் பேச்சு வார்த்தையின் போது, "எனக்கு மூணு தொகுதி குடுத்தாலே ஆச்சு"ன்னு அடம் புடிக்குறத பாத்துப் பதறி, கூட இருந்த அவர் கட்சிப் பொதுச் செயலாளர் தனியாக அழைக்கிறார்... "சார், நான், நீங்க - ரெண்டு தொகுதி சரி... அந்தம்மா பாட்டுக்கு ஒரு நல்ல மூடுல மூணு தொகுதியைக் குடுக்குறேன்னு சொல்லிட்டா, நம்ம கட்சிக்கு மூணாவதா ஒரு உறுப்பினரைச் சேர்க்கணும்... இந்த ஆட்டைக்கு நான் வரல... நீங்க எறங்கி வந்து ரெண்டையே பேசி முடிக்குற வழியப் பாருங்க..."
டி ராஜேந்தர், கட்சியனரிடம்... "வர்ற தேர்தல்ல நம்ம கட்சி 234 தொகுதிலயும் தனியா நிக்குறதா அறிவிக்கப் போறேன்... என்ன சொல்றீங்க"... கட்சிக் காரர் சொலிறார்... "சார், மொதல்ல ஆபீசை காலி பண்ணுங்க... ஒங்க கட்சியிலேயே, நீங்க மட்டும் தான் தனியா, உறுப்பினரா நிக்குறீங்க... உங்க கட்சிக்கு உறுப்பினர் இருக்கா மாதிரிக் காட்டணும்னு, எங்க கட்சி அலுவலகத்துக்கு வந்து, ஏன் சார், எங்கக்கிட்ட இந்த அலப்பறை..."
ஆற்காடு வீராசாமி, கலைஞரிடம் ஓடி வந்து - "தலைவரே, கட்சி மீட்டிங்குக்கு கொக்கி போட்டுக், கரண்ட் திருடுனவனப் புடுச்சுக் கொண்டாந்திருக்கேன்..." கலைஞர் சொல்கிறார்... "அடேடே, பக்கத்து மாநிலத்துலேருந்தா... நம்ம மாநிலத்துல தான், கரண்ட் கம்பில கரண்ட் வர்றத நிப்பாட்டி நாலரை வருஷமாச்சே"
விஜயகாந்த், பிரேமலதாவிடம் சொல்கிறார்... "கூட்டணி விஷயத்துல இன்னும் குழப்பமாவே இருக்குடி..." பிரேமலதா பதிலுக்கு சொல்கிறார், "விடுங்க, இன்னும் நாலரை வருஷம் இருக்கே..." விஜயகாந்த் பதறிப் போய், "என்னடி சொல்றே..." எனக் கேட்க, அலட்டிக் கொள்ளாமல் பிரேமலதா சொல்கிறார்... "பின்ன, நீங்க முடிவெடுக்குற வரைக்கும் தேர்தல் கமிஷன் காத்துருக்குமா என்ன... எலக்ஷன் முடிஞ்சு அந்தம்மா பதவிக்கு வந்து ஆறு மாசம் ஆச்சு... காலண்டரப் பாருங்க, இப்ப 2012 ஜனவரியில இருக்கோம்". விஜயகாந்த் "அய்யய்யோ, வட போச்சே!!!"
- கலைபிரியன்
புதிதாக தோசைக் கடை ஆரம்பித்திருக்கும் ஆ. ராசா, எதிரில் காலிக் கடையில் தோசை சுட்டுக் கொண்டிருக்கும் தயாநிதி மாறனிடம் - "கண்ணா, நான் ஒரு தோசே சுட்டா, 176,000 கோடி தோசே சுட்டா மாதிரி... நீ எல்லாம் என்ன, ஜூஜூபி, வ்வர்ட்டா..."
ஐந்து நபர் குழுவில் இல்லாத இளங்கோவன் போராட்டம் நடத்தத் துவங்கியவுடன், தங்கபாலு, தன் சகாக்களிடம் - "டேய், ஆரம்பிச்சுட்டாங்கடா... இனி, ஒரு பக்கி சட்ட வேட்டியோட உருப்படியாப் போய்ச் சேர முடியாது... சூதானமா இருந்துக்குங்கடா... அம்புட்டு தான்... சொல்லிப் புட்டேன்... ஆமா..."
சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ், சிபிஐ மற்றும் பிரதமரிடம், அவ்வப்போது அவர்கள் அலுவலகத்துக்கு முன் வந்து நின்று கொண்டு, "முதல் மரியாதை" ஸ்டைலில் உடுக்கை அடித்துக் கொண்டே, "அய்யா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்..."
கருணாநிதி, அண்ணா சமாதியில் தனிமையில் - "அண்ணைக்கே, உங்களுக்கப்புறம் நாவலரை வுட்ருந்தா, அண்ட்ராயராவது எஞ்சி இருக்கும்... இன்னைக்கு அதுக்கும்ல வேட்டு வச்சுருச்சு இந்த ஆக்கங்கெட்ட கூவ... மகன்னு செல்லம் கொடுத்தது தப்பாவுல்ல போச்சு... மாமியா கண்ணுல, நான் வெரல வுட்டு ஆட்டுனேன், ஒரு காலத்துல... இன்னிக்கு என்னடான்னா, எம் பய புள்ளைகளால, மருமகளும், பேரனும் என்னையப் பாடாப் படுத்திப் பச்சடி வைக்குதுங்களே... ஐயோ, ஆண்டவா..." சுத்தி முத்திப் பார்த்துவிட்டு, "நல்ல வேளை, எவனும் இல்லை... இல்லாட்டி, கருணாநிதியின் ஆத்திக முகம்னு எழுதி, உள்ளதுக்கும் வேட்டு வச்சுருவானுவ..."
கார்த்திக், கூட்டணிப் பேச்சு வார்த்தையின் போது, "எனக்கு மூணு தொகுதி குடுத்தாலே ஆச்சு"ன்னு அடம் புடிக்குறத பாத்துப் பதறி, கூட இருந்த அவர் கட்சிப் பொதுச் செயலாளர் தனியாக அழைக்கிறார்... "சார், நான், நீங்க - ரெண்டு தொகுதி சரி... அந்தம்மா பாட்டுக்கு ஒரு நல்ல மூடுல மூணு தொகுதியைக் குடுக்குறேன்னு சொல்லிட்டா, நம்ம கட்சிக்கு மூணாவதா ஒரு உறுப்பினரைச் சேர்க்கணும்... இந்த ஆட்டைக்கு நான் வரல... நீங்க எறங்கி வந்து ரெண்டையே பேசி முடிக்குற வழியப் பாருங்க..."
டி ராஜேந்தர், கட்சியனரிடம்... "வர்ற தேர்தல்ல நம்ம கட்சி 234 தொகுதிலயும் தனியா நிக்குறதா அறிவிக்கப் போறேன்... என்ன சொல்றீங்க"... கட்சிக் காரர் சொலிறார்... "சார், மொதல்ல ஆபீசை காலி பண்ணுங்க... ஒங்க கட்சியிலேயே, நீங்க மட்டும் தான் தனியா, உறுப்பினரா நிக்குறீங்க... உங்க கட்சிக்கு உறுப்பினர் இருக்கா மாதிரிக் காட்டணும்னு, எங்க கட்சி அலுவலகத்துக்கு வந்து, ஏன் சார், எங்கக்கிட்ட இந்த அலப்பறை..."
ஆற்காடு வீராசாமி, கலைஞரிடம் ஓடி வந்து - "தலைவரே, கட்சி மீட்டிங்குக்கு கொக்கி போட்டுக், கரண்ட் திருடுனவனப் புடுச்சுக் கொண்டாந்திருக்கேன்..." கலைஞர் சொல்கிறார்... "அடேடே, பக்கத்து மாநிலத்துலேருந்தா... நம்ம மாநிலத்துல தான், கரண்ட் கம்பில கரண்ட் வர்றத நிப்பாட்டி நாலரை வருஷமாச்சே"
விஜயகாந்த், பிரேமலதாவிடம் சொல்கிறார்... "கூட்டணி விஷயத்துல இன்னும் குழப்பமாவே இருக்குடி..." பிரேமலதா பதிலுக்கு சொல்கிறார், "விடுங்க, இன்னும் நாலரை வருஷம் இருக்கே..." விஜயகாந்த் பதறிப் போய், "என்னடி சொல்றே..." எனக் கேட்க, அலட்டிக் கொள்ளாமல் பிரேமலதா சொல்கிறார்... "பின்ன, நீங்க முடிவெடுக்குற வரைக்கும் தேர்தல் கமிஷன் காத்துருக்குமா என்ன... எலக்ஷன் முடிஞ்சு அந்தம்மா பதவிக்கு வந்து ஆறு மாசம் ஆச்சு... காலண்டரப் பாருங்க, இப்ப 2012 ஜனவரியில இருக்கோம்". விஜயகாந்த் "அய்யய்யோ, வட போச்சே!!!"
- கலைபிரியன்
1 comment:
"வர்ற தேர்தல்ல நம்ம கட்சி 234 தொகுதிலயும் தனியா நிக்குறதா அறிவிக்கப் போறேன்... என்ன சொல்றீங்க"... கட்சிக் காரர் சொலிறார்... "சார், மொதல்ல ஆபீசை காலி பண்ணுங்க... ஒங்க கட்சியிலேயே, நீங்க மட்டும் தான் தனியா, உறுப்பினரா நிக்குறீங்க... உங்க கட்சிக்கு உறுப்பினர் இருக்கா மாதிரிக் காட்டணும்னு, எங்க கட்சி அலுவலகத்துக்கு வந்து, ஏன் சார், எங்கக்கிட்ட இந்த அலப்பறை..."
--சூப்பர்
Post a Comment