வங்கே... பழகுவோம்யா...

வாங்கே... பழகுவோம்யா... எங்கிட்ட ரெண்டு ப்ளாக் இருக்கு... இங்கிலீஷுல ஒண்ணு (http://friendly-ram.blogspot.com/), தமிழ்ல ஒண்ணு (வேறெது... இது தான்யா!!!)... இங்கிலீஷ்ல எழுதுறத விட்டு நாளாச்சு... வயசாயிருச்சில்லே (அதுல வேரே கண்ட காலிப் பய ஹேக் பண்ணி கண்ட மொழியிலயும் கமன்ட் எழுதுரான்யா!!! போதும்யா!!! அப்பறம் பாத்துக்குவோம்!!!)... பாருங்க!!! படிங்க!!! புடிச்சிருந்தா சரி. இல்லேன்னா பரவாயில்லே!!! தப்பா நெனச்சுக்க மாட்டம்யா!!!

Followers

Friday, February 4, 2011

கட்டுச் சோத்துக்கு, பெருச்சாளி காவல்...

கேரளாவில், அந்தக் காலத்திலேயே, பாமாயில் ஊழல், ராசாவுடன் தொலை தொடர்பு செயலாளரா இருந்து ஸ்பெக்ட்ரம் விசாரணையை ஆரம்ப காலத்திலேயே முடக்க முயற்சி செய்தது, மேலும், இப்படிப் பலப் பல "நல்ல" தகுதிகள் வாய்ந்தவரை, அதே ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரித்து வரும் "சிபிஐ"க்கு பொறுப்பான, சக்தி வாய்ந்த, "விஜிலன்ஸ்" துறையின் தலைவராக நியமித்து, "கட்டுச் சோத்துக்கு, பெருச்சாளி காவல்" என்ற புது நடைமுறையைக் கையாண்டிருக்கிறது மத்திய அரசு.

இந்த நியமனத்தைச் செய்யும் பொறுப்பு, பிரதமர் (மன்மோகன் சிங்), நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் (சுஷ்மா ஸ்வராஜ்) மற்றும் உள்துறை அமைச்சர் (ப. சிதம்பரம்) ஆகிய மூவர் அடங்கிய குழுவுக்கு உள்ளது. மேற்கூறிய பிரச்சனைகளைக் குழுவில் தான் எழுப்பி, நியமனத்தை எதிர்த்ததாக, சுஷ்மா சொல்கிறார். அவ்வாறிருந்தும், அவரையே நியானம் செய்வது என்பது ஜனநாயகத்தை இன்றளவும் நம்பும் நெஞ்சங்களை ஈட்டி கொண்டு குத்துவதாக அமைந்துள்ளது. மாற்றுக் கட்சி உறுப்பினர்களை ஒருங்கே கொண்டு செயல்படும் முறை தேய்ந்து வரும் இந்தக் காலத்தில், இது போன்ற நியமனங்களிலாவது ஜனநாயகப் பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். சோனியாவின் ஆலோசகர்களான வின்சன்ட் ஜார்ஜும், அகமது படேலும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் வற்புறுத்தி, இந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வைத்துள்ளார்கள் என்றொரு செய்தி ஊடகங்கள் வாயிலாக அறியப் படுகிறது. நாட்டின் சிறந்த அறிவு ஜீவிகளில் இருவர், அதுவும் அவ்வளவு சக்தி வாய்ந்த பதவிகளில் அமர்ந்திருப்பவர்களே, தனிப் பட்டோரின் விருப்பு வெறுப்பிற்குப் பணிந்து செயல்படுகிறார்கள் என்றால், அவர்களின் கீழ் பணிபுரியும், லட்சக் கணக்கான அதிகாரிகள் எப்படி செயல்பட முடியும், அன்றாடம், நம் நாட்டில். இதில் வல்லரசாகப் போகிறோம் என வாய் கிழியப் பேச்சு வேறு. இப்படிப் பட்ட ஒரு சர்ச்சை மிக்க நியமனத்துக்கு, ஒப்புதலும் அளித்து, அவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைக்கும் ஜனாதிபதி, இருந்தும், இல்லாததற்குச் சமம். அவர் நம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக இருந்தாலும், அதை எண்ணிப் பெருமைப் பட்டுக் கொள்ள ஒன்றும் இல்லை. சுப்ரீம் கோர்ட், சில மாதங்களாக, தனது சாட்டையைச் சுழற்றிக் கொண்டிருக்கிறது, இந்த அரசுக்கு எதிராக, இது போன்ற விவகாரங்களில். தாமதமாக நடந்தாலும், அந்த உயரிய நீதி ஆலயமாயினும், சட்டத்தின் மாண்பையும், ஜனநாயகத்தின் மேன்மையையும் உயர்த்திப் பிடிக்கும் என நம்புவோம்.

- கலைபிரியன்

No comments: