செய்தி - 'இனி ஒருவரையும் சாகவிட மாட்டோம்... தமிழக மீனவர்கள் கொலையைத் தடுக்க, இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் போடுவோம்' என்று கொழும்பு செல்லும் வழியில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் கூறிவிட்டுச் சென்றார்.
கண்ணோட்டம் - கச்சத் தீவு ஒப்பந்தம் ஒன்றைப் போட்டதால்தானே இன்றும் ஈழத்துச் தமிழச்சி மட்டுமல்லாமல், என் தாயகத்தில் உள்ள தமிழச்சியும், அன்றாடம், தாலி அறுக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது!!! இன்னும் ஒரு ஒப்பந்தம் போட்டு, என்ன, தமிழகத்துக்கே இலங்கைக் கடற் படையினர் வந்து கொலை செய்துவிட்டுச் செல்ல வழி வகுக்கப் போகிறார்களா? அமெரிக்கர்களுக்கும் சீனர்களுக்கும் சற்றும் சளைக்காத, மனித வளத்தைக் கொண்டு, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகப் பறந்து விரிந்து கிடக்கும் இம்மண்ணில், என் மீனவ நண்பர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாதா? ரேஷன் அட்டை கிடையாதா? என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்? பரம எதிரி நாடான பாகிஸ்தானோ, ஏன், பங்களாதேஷோ கூட செய்யத் துணியாத காரியத்தைச் செய்ய, சுண்டைக்காய் தேசமான இலங்கைக்கு எப்படி வந்தது தைரியம்? நம் மீனவன் தமிழ் பேசுகிறவன் என்ற ஒரே காரணத்தினால் தானே இந்தக் கேவலமான கொலை பாதகச் செயலை செய்யத் துணிகிறான் அந்த இன வெறியன்? அவனுடன் கொஞ்சி விளையாடி ஒப்பந்தம் போட வேண்டும் என்று சொல்வது இந்தியாவுக்கும், அதன் குடிமக்களான எமக்கும் நீங்கள் இழைக்கும் வெட்கக் கேடான, துரோகச் செயல் இல்லையா? இப்படிப் பட்ட இழி நிலைக்குப் பின், நாம் வல்லரசாக மாறினால் என்ன? மாறாவிட்டால்தான் என்ன? தமிழ் செம்மொழியானால் மட்டும், தமிழன் மேன்மை அடைந்துவிட்டான் என்று படம் காட்டலாம் என்று எண்ணமா? இதை விட மேலும் கேவலமான எவ்வளவோ கேள்விகளைக் கேட்கத் தோன்றினாலும், இறையாண்மைக்கு உண்மையில் மரியாதை கொடுத்து, என் இடுகைப் பதிவை அழுக்காக்கிக் கொள்ள விரும்பாமல் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்...
கண்ணோட்டம் - கச்சத் தீவு ஒப்பந்தம் ஒன்றைப் போட்டதால்தானே இன்றும் ஈழத்துச் தமிழச்சி மட்டுமல்லாமல், என் தாயகத்தில் உள்ள தமிழச்சியும், அன்றாடம், தாலி அறுக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது!!! இன்னும் ஒரு ஒப்பந்தம் போட்டு, என்ன, தமிழகத்துக்கே இலங்கைக் கடற் படையினர் வந்து கொலை செய்துவிட்டுச் செல்ல வழி வகுக்கப் போகிறார்களா? அமெரிக்கர்களுக்கும் சீனர்களுக்கும் சற்றும் சளைக்காத, மனித வளத்தைக் கொண்டு, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகப் பறந்து விரிந்து கிடக்கும் இம்மண்ணில், என் மீனவ நண்பர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாதா? ரேஷன் அட்டை கிடையாதா? என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்? பரம எதிரி நாடான பாகிஸ்தானோ, ஏன், பங்களாதேஷோ கூட செய்யத் துணியாத காரியத்தைச் செய்ய, சுண்டைக்காய் தேசமான இலங்கைக்கு எப்படி வந்தது தைரியம்? நம் மீனவன் தமிழ் பேசுகிறவன் என்ற ஒரே காரணத்தினால் தானே இந்தக் கேவலமான கொலை பாதகச் செயலை செய்யத் துணிகிறான் அந்த இன வெறியன்? அவனுடன் கொஞ்சி விளையாடி ஒப்பந்தம் போட வேண்டும் என்று சொல்வது இந்தியாவுக்கும், அதன் குடிமக்களான எமக்கும் நீங்கள் இழைக்கும் வெட்கக் கேடான, துரோகச் செயல் இல்லையா? இப்படிப் பட்ட இழி நிலைக்குப் பின், நாம் வல்லரசாக மாறினால் என்ன? மாறாவிட்டால்தான் என்ன? தமிழ் செம்மொழியானால் மட்டும், தமிழன் மேன்மை அடைந்துவிட்டான் என்று படம் காட்டலாம் என்று எண்ணமா? இதை விட மேலும் கேவலமான எவ்வளவோ கேள்விகளைக் கேட்கத் தோன்றினாலும், இறையாண்மைக்கு உண்மையில் மரியாதை கொடுத்து, என் இடுகைப் பதிவை அழுக்காக்கிக் கொள்ள விரும்பாமல் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்...
No comments:
Post a Comment