எதுகைகளுக்கு என்றுமே ஏங்கியதில்லை இவன்...
மோனைகள், இவனுக்கு மட்டும் முச்சந்தியிலும் கிட்டின...
பசித்திருந்தான் என்றும், ஒரு படைப்பாளியாய்...
விழித்திருந்தான் வேரூன்றி, ஆல விருட்சமாய்...
வேர்களே, இவனை வேறாய் மாற்றிவிட்டன...
வாழ்ந்து முடித்த பின், வரலாறாய்ப் போற்றப்பட வேண்டியவன்...
வீழ்வதற்கு முன், இன்று, விலை பேசப் படுகிறான் - அவனுடைய விழுதுகளால்...
தொப்பையில் சறுக்கி விளையாடிய சருகுகள் கூட, அவனை இன்று...
பணம் காய்ச்சி மரமாகவே பார்க்கின்றன...
இடம் கொடுத்தான், மடம் போச்சு... மக்கி மண்ணாய்ப்
போகும் வேளையில், மானத்தின் விலையை
மட்டும் மதிக்கமுடியவில்லை அவனால்!!!
- கலைபிரியன்
No comments:
Post a Comment